திங்கள், 12 அக்டோபர், 2009

தர்ஷினி(Priya)

கண்களாலே கருணைப் பொழிந்து

வாக்கினிலே இனிமைக் கலந்து

கைகளாலே அரவணைத்து

கால்களாலே உலகம் சுற்றி

மூச்சினிலே உயிரை வைத்து

இசையினிலே மெய்மறந்து

கவிதையாக வாழ்ந்து காட்டி

அழகினைத்தான் வெளிக்கொணர்ந்து

உணர்வுகளாலே உயர்ந்து நின்று

நல்லாசானின் அறிவுரை ஏற்று

அடக்கத்திலே சிறந்து விளங்கி

கடமையிலே தலைச் சிறந்து

பிறருக்காக மனம் கசிந்து

மனதினிலே உண்மை நிலைத்து

அன்பினிலே சுடர் ஏற்றி

தியானத்தின் முறை அறிந்தே

ஞானத்தின் வழி அடைந்து

மௌனத்திலே உணரச் செய்து

ஆரவாரமற்ற ஒரு மூலையிலே

பிறருக்கும் பகிர்ந்தளித்தே

வாழ விரும்புகிறேன் நான்................

கருத்துகள் இல்லை: