திங்கள், 12 அக்டோபர், 2009

கல்லறை தூக்கமும் சுகம்- உன் நினைவுகள் தாலாட்ட

என்னை பற்றி சொல்ல எனக்கே ஒரு வித அருவறுப்பை தருகிறது... உங்களை போல் நானும் ஒரு சராசரி மனிதன் தான்...

முதல் பக்கம் :
புதுவையில் மிக பிரபலமான பள்ளியில் 94% விழுக்காட்டில் தேர்ச்சி பெற்றவன்...

வாழ்வில் தோற்கப்போவது தெரியாமல், ஒரு இறுமாப்பில் கல்லூரி மாணவனாய்...
பெண் சகவாசமே இல்லாமல் கருப்பு வெள்ளை பட்டாம்பூச்சியாய் சுற்றி திரிந்தவன்... அதுவும் என் வசந்த காலம்... நண்பர்கள் படை சூழ தனி ராஜ்ஜியமே உருவானதாய் மிதப்பில் திரிந்த காலமது....

கரிய மேகங்களை கிழித்துக்கொண்டு பீறிட்டு வரும் மின்னல் போல... இரண்டாமாண்டு ரம்மியமாய் வந்தவள் என் தோழி...

முதன்முதலாய்
மென்மையாய் ஒரு நட்பு... என் மெல்லின நாயகியோடு...

ஆர்ப்பரிப்பாய் இருக்கும் என் நட்புலகில் ஒரு மயிலிறகாய் அவள்...

என்னை கொஞ்சம் கொஞ்சமாய் ஆட்சி செய்ய தொடங்கியவள்!
நட்பாட்சிக்கு புது விதிகளை வகுத்தவள்..

அவள் அன்பின் பாதிப்பில் அடிபணிந்தன என் குடிகாரத்தனமும் , முரட்டுத்தனமும்.....

மெல்லிய பூவுக்கு காவல்காரனாய் நான்... பறித்திடவும் , பருகிடவும் வந்த வண்டுகளிடம் சிக்கி சின்னாபின்னமாய் போனேன்... என் உள்ளங்கை உலகத்தில் இன்னும் பூ... தன வாசம் மாறாமல் மனம் வீசிக்கொண்டு இருப்பது... எனக்கு நானே ஆறுதல் படுத்திக்கொள்வதாய் உள்ளது....

வீசும் வரை காற்று...
சுடும் வரை நெருப்பு...
காதல் வருகின்ற வரை நட்பு...

காதலுக்கு ஆசைப்பட்டு அவள் சென்றதில் தவறில்லை... ஆசைப்பட்டதை அடைந்திட அவள் தேர்ந்தெடுத்த முறையில் மடிந்து போனவன் தான் நான்....

பிரிவென்ற ஒன்று எங்களிடையில் வந்து மூன்றாண்டு ஆகப்போகிறது...
இன்று அவள் நினைவாய் இருப்பது...
அவள் நினைவுகளும்... என் கையில் சிகரெட் ஏற்படுத்திய தழும்புகள் மட்டும் தான்....

அவள் அன்புக்கும் நட்புக்கும் சொந்தக்காரனாய் இருந்த நான்...
இன்று பீருக்கும் , பிராந்திக்கும் சொந்தம் !!!


இனி
நான் எண்ணப்போகும்
வாழ்நாட்களில்
உன் நினைவுகளும்
என் வேதனைகளும்
தீர்ந்துவிடும் நிலை வந்தால்
ஒரு பாட்டில் பீரும்,
ஒரே ஒரு சிகரெட்டும்
இந்த பிரபஞ்சத்தில்
மிச்சம் இருக்கட்டும்!

ஒவ்வொரு விஷயத்திலும் ஒடுக்கப்பட்டவனாய், வெறுக்கப்பட்டவனாய், ஒதுக்கப்பட்டவனாய்....

கை நிறைய சம்பளம் கொடுத்த பணி விடுத்து , ஒரு குடிகாரனை விட கேவலமானவனாய் என் நினைவுகளை
பிரேத பரிசோதனை செய்தபடி
எனதறையில் நான் !

என்னை விடுவித்துக்கொள்ள செய்யாத முயற்சிகள் இல்லை.. பலன் கிடைக்காமல்.... நாதாரித்தனமாய் ஊர் சுற்றிக்கொண்டு...

கடைசி பக்கம்:
தினம் முடிகின்ற இரவு... ஒரு விடியலுக்காக தான்.... என்னில் எதிர்மறையாய்... இரவு விடிவதே இல்லை....

ஒரு விடியலுக்காய் காத்துகிடக்கும்...
உங்கள் அன்பன்....

கவிதைக்காரன் டைரி

உன் கரங்களுக்கு கோடி முத்தங்கள்..
தயவு செய்து நீ ஒருபோதும் உன் கரங்களை உதறிவிடாதே....
தோள்கொடுத்த உன் நட்பிற்கு நன்றிகள் கோடி
நட்பே உன் கற்பை நான் என்றும் அழியாது காப்பேன்
**********************************************
நட்பிழைச் சுற்றிக் கொண்ட..
சுண்டு விரல் ரேகைகளில்..
படிந்து விட்ட கோடுகளின்..
சிவந்த வரிகளில்..
படுத்தபடி..
யோசித்துக் கொண்டிருக்கிறது..
எழுதாத
கவிதை ஒன்று..!

siva srinivasan

நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும்,மனதுக்கும் துன்பம் தரமாட்டேன். துன்பபடும் உயிர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன்

!கவியழகன்™ !கயமுகமறியான்™

**எதுவாவேன்?**

அறியேன் அறியேன் யானறியேன்
ஆண்டவன் ஏன்படைத்தானென்று யானறியேன்
இனிய உலகமிதில் – ஏனோ?…
ஈசன் என்னை படைத்ததேனோ?…
உழலும் வாழ்க்கைக்கடல் கடந்திடவோ!…
ஊர்போற்ற பேர்பெற்று வாழ்ந்திடவோ!…
எண்ணற்ற உலகமக்கள் – அதில்
ஏற்றம் பெற்று தெரிவேனோ?…
ஐம்பொறி ஆசை துறப்பேனோ?…
ஒற்றுமை எங்கும் வளர்ப்பேனோ?…
ஓர் உலகம் செய்வேனோ?…
ஔதசியம்போல் உலகிற்கு பயன்தருவேனோ?…
எஃகெனமாறி உலகை வெல்வேனோ?!…

ஃஃஃ

**நட்பு**

அன்பான என் தோழீ
ஆண்டவன்தான் கொடுத்தான் வாழீ
இன்முகம் காட்டினாய் கவியில்
ஈடில்லை நட்பின் உறவில்
உள்ளத்தில் குன்றாய் நின்றாய்
ஊருக்கு சொல்வேன் நன்றாய்
எதுவரை நட்பின் பாலம்
ஏதுமில்லை வானத்தில் எல்லை
ஐயமோ சிலநேரம் தொல்லை
ஒற்றுமைதான் எந்நாளும் திண்மை
ஓயாமல் செய்வோம் நன்மை
ஔவையாய் உயர்வாய் கவியில்
ஃபோல் தெரிவாய் தனியாய்.

ஃஃஃ

**தமிழ்ப்பெண்**

அழகான தேவதை அவள்
ஆண்டவனின் தனிப் படைப்பவள்
இன்முகமோ அவள் முகவரி
ஈடில்லா அழகோ வெகுமதி
உலகே வியக்கும் மெல்லிடை
ஊமை விழிகளோ வில்
எவர்தான் விரும்பார் சொல்
ஏமாற்றம் தான் விரும்பியோற்கு
ஐரிஸ் நிறமோ கண்
ஒரு தலையாய் காதலித்தோர்
ஓடாமல் ஓடுகின்றார் காண்
ஔரவம் தான் அவள்சொல்
அஃதேகாண் அவள் தமிழ்ப்பெண்.

ஃஃஃ

**மனைவி**

அவள் பிறப்பு வேறிடம்
ஆசைகளும் விருப்பங்களும் வேறுவேறு
இனிய காதலில் மலர்ந்தாள்
ஈடில்லா இல்லறத்தில் கலந்தாள்
உள்ளத்தை என்னிடம் கொடுத்தாள்
ஊர்போற்ற நல்லபெயர் எடுத்தாள்
என்விருப்பம் தனதாக ஏற்றாள்
ஏற்றம்பெற வழிகள்பல உரைத்தாள்
ஐஸ்வரியமாய் என்னில் நிறைந்தாள்
ஒவ்வொருநாளும் காதலை வளர்த்தாள்
ஓய்வின்றி குடும்பத்திற்காக உழைத்தாள்
ஔவியம் பேசல் தவிர்த்தாள்
இஃதே இல்லாள் அறமென்றுரைத்தாள்.

ஃஃஃ

**மக்கட்பேறு**

அன்பாய் குழந்தைகள் இரண்டு வேண்டும்
ஆசைதீர கொஞ்சி மகிழ்ந்திடல் வேண்டும்
இன்பம் பெற்றே வாழ்ந்திடல் வேண்டும்
ஈடுஇணை வேரில்லையென்று தெளிந்திடல் வேண்டும்
உலகுக்கு நல்மனிதராய் கொடுத்திட வேண்டும்
ஊர்போற்ற நல்லவராய் வளர்த்திட வேண்டும்
எட்டுத்திக்கும் அறியச் செய்திட வேண்டும்
ஏமாற்றம் தவிர்க்க பழக்கிட வேண்டும்
ஐயமின்றி செய்வன செய்திடல் வேண்டும்
ஒற்றுமை பேண கற்பித்திட வேண்டும்
ஓய்வின்றி வாழ்வில் உழைத்திட வேண்டும்
ஔவியம் பேச மறுத்திடல் வேண்டும்
இஃது எந்நாளும் மறக்காதிருத்தல் வேண்டும்.

ஃஃஃ

**வாரிசு**
அன்பு மகன் ஆதித்யா
ஆசை மகள் ஐஸ்வர்யா
இருவரும் எங்களின் உயிரோட்டம்
ஈடில்லா பாசத்தின் நீரோட்டம்
உயிராய் அன்பைப் பொழிகின்றார்
ஊட்டம் எம்வாழ்விற்கு கொடுக்கின்றார்
எங்களின் எண்ணம் புரிந்திடுவர்
ஏற்றம்பெற நாளும் உழைத்திடுவர்
ஐந்திலேயே இருவரும் தெளிந்திட்டனர்
ஒப்புமை சொல்லி வளர்கின்றனர்
ஓசைபோல் திக்கெங்கும் புகழ்பரப்பிடுவர்
ஔசித்தியம் நாளும் வளர்திடுவர்
அஃறிணைக்கும் பரிவுகாட்டி மானுடம் உயர்த்திடுவர்.

ஃஃஃ

**அடடா அருமை**

ஆண்டவன் படைத்தான் நம்மை
இயன்றவரை வளர்த்துவிடு திறமை
ஈசலாய் மாய்வது சிறுமை
உயர்வதற்கு வெல்லுங்கள் கயமை
ஊழ்வினை செய்வதா வறுமை
எதிரிக்கும் செய்யுங்கள் நன்மை
ஏற்றம்பெறும் உங்கள் நிலைமை
ஐயமின்றி போற்றிவிடு பெண்மை
ஒருநாளும் பொறுத்திடாதே மடமை
ஓதுவாரை தொடர்வதில்லை அறியாமை
ஔவையாரோ தமிழுக்கு பெருமை
ஃ தமிழின் தனித்தன்மை.

ஃஃஃ

***படித்ததில் பிடித்த***
அகரவரிசைக் கவிதைகள்

--
!கவியழகன்™

°ღ•தமிழ்மணி•ღ°

°ღ•தாயிற் சிறந்த கோவிலும் இல்லை, தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை๏๏๏°ღ•

ღ♥ღத♥ღமி♥ღழ்♥ღம♥ღக♥ღன்♥

°ღ•தவற்றை மன்னிப்பவன் மனிதன்,
தவற்றை மறப்பவன் தெய்வம்°ღ•

கண்டிப்பா என்னால் தெய்வமாக முடியாது, முயற்சி பண்ணுறேன்

°ღ•எது வரை வாழ்க்கை அழைக்கிறதோ
அது வரை நாமும் சென்றிடுவோம்°ღ•,

°ღ•விடைபெறும் நேரம் வரும்போதும்
சிரிப்பினில் நன்றி சொல்லிடுவோம்°ღ•

°ღ•ஊருக்கொரு வானம் இல்லையே இறைவா உன் படைப்பில்°ღ•
°ღ•ஆளுக்கொரு ஜாதி இல்லையே அது போல் உயிர் பிறப்பில்°ღ•
°ღ•உண்ணும் உணவும் நீரும் தினம் தந்த தெய்வமே
என்றும் உமக்கே நாம் நன்றி சொல்லுவோம்°ღ•


°ღ•எங்கே உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், உரிமைகள் நசுக்கப்படுகிறதோ; அங்கே புரட்சி வெடிக்கிறது°ღ•


°ღ•எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது°ღ•
°ღ•எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது°ღ•
°ღ•எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்°ღ•


°ღ•உள்ளங்கள் அழுதாலும், உதடுகள் சிரிக்கட்டும்°ღ•


வைரத்துளிகள்

°ღ•பேசக்கூடாததை பேசாதிருப்பது தான் நாவடக்கம்,
வாய் மூடி இருப்பதுஅல்ல°ღ•
°ღ•செல்வமும் மதிப்பும் பெருக பர்ஸையும், வாயையும்,
அதிகம் திறக்காதே°ღ•
°ღ•பணமும் செருப்பும் ஒன்று சிறிதாக இருந்தால் கடிக்கும், பெரிதாக இருந்தால் தடுக்கி விழச் செய்யும்°ღ•


உறுதிமொழி

°ღ•மனிதனை மனிதனாய் பார்ப்போம்°ღ•
°ღ•மதத்தை மனிதநேயத்தால் வேரறுப்போம்°ღ•
°ღ•வறுமையை வடு தெரியாமல் ஒழிப்போம்°ღ•
°ღ•வலியோர்க்கு மட்டும் வளமான வாழ்வு என்பதை மாற்றுவோம்°ღ•

°ღ•°ღ•

கவிதாஜீவன்

நண்பர்களாக பழக வேண்டிய கட்டாயம் இல்லை....

நட்புக்கு அது தேவையும் இல்லை...

எங்கோ பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம்

இங்கே சந்தித்துக்கொண்டோம்....

காலங்கள் போடும் கோலத்தில் நாமும் ஒரு புள்ளியாக..

நம்மை இணைக்கும் (நட்பு)பாலமாத நாமே இருக்கிறோம்..

இறுதிவரை தொடருமா என்று நமக்கே தெரியாது...

இருந்தும் உறவாடினோம்...

பிரிந்தாலும் எங்கோ எப்போதோ சந்திதுகொள்வோம்...

அப்போ நலம் விசாரிக்க மட்டுமே நேரம் கிடைக்கும்..

அவரவர் பாதையில் அவரவர் பயணத்தை தொடருவோம்...

மனதில் ஒரு வலி மட்டும் இருக்கும்...ஏன் என்று தெரியாது...

இது நண்பர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை...(உங்களுக்கு தெரியுமா)

==oO====oO====Oo========oO====oO====Oo=====

பிரியமான தோழி ..

ஒவ்வொரு காலையும்
சோம்பல் முறிக்கையில்
கடந்த கால நினைவுகள்
என் கால்களை இடறும்..!!

கால்களை உதறி
நிகழ் காலத்தில் பிரவேசிக்க,
மீண்டும் பிடித்திழுத்து
வல் வளைப்பு செய்யும்...!!

எதிர்கால கனவுகள் போல்,
கடந்தகால நினைவுகள்
ஒன்றும் பாசமானவையல்லவே...

அவற்றின் பயங்கரத்தில்
என் பாசமான கனவுகள்
துகிலாய் உரியப்பட,
நிகழ்காலமும் நரகமாகும்..!!

நரகத்திலிருந்து எழுதுகிறேன்
இந்த வரிகளை,
இறந்த கால நினைவுகளை
முறித்து முறிவு வைத்தியம்,
செய்ய யாராகினும் வாருங்களென்று..!!

FRIENDSSSSSSSSSSSSS

"நம் வெற்றியின் போது கை தட்டும் பல விரல்களை விட தோல்வியின் போது கை கொடுக்கும் நண்பனின் ஒரு விரலே சிறந்தது "

தர்ஷினி(Priya)

கண்களாலே கருணைப் பொழிந்து

வாக்கினிலே இனிமைக் கலந்து

கைகளாலே அரவணைத்து

கால்களாலே உலகம் சுற்றி

மூச்சினிலே உயிரை வைத்து

இசையினிலே மெய்மறந்து

கவிதையாக வாழ்ந்து காட்டி

அழகினைத்தான் வெளிக்கொணர்ந்து

உணர்வுகளாலே உயர்ந்து நின்று

நல்லாசானின் அறிவுரை ஏற்று

அடக்கத்திலே சிறந்து விளங்கி

கடமையிலே தலைச் சிறந்து

பிறருக்காக மனம் கசிந்து

மனதினிலே உண்மை நிலைத்து

அன்பினிலே சுடர் ஏற்றி

தியானத்தின் முறை அறிந்தே

ஞானத்தின் வழி அடைந்து

மௌனத்திலே உணரச் செய்து

ஆரவாரமற்ற ஒரு மூலையிலே

பிறருக்கும் பகிர்ந்தளித்தே

வாழ விரும்புகிறேன் நான்................

Bharathi Poem

தேடிச் சோறு நிதந்தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி-மனம்
வாடித் துன்பமிக உழன்று-பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து-நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி-கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ
- அமரகவி பாரதி

Bharathi

தேடிச் சோறு நிதந்தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி-மனம்
வாடித் துன்பமிக உழன்று-பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து-நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி-கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ
- அமரகவி பாரதி