என்னை பற்றி சொல்ல எனக்கே ஒரு வித அருவறுப்பை தருகிறது... உங்களை போல் நானும் ஒரு சராசரி மனிதன் தான்...
முதல் பக்கம் :
புதுவையில் மிக பிரபலமான பள்ளியில் 94% விழுக்காட்டில் தேர்ச்சி பெற்றவன்...
வாழ்வில் தோற்கப்போவது தெரியாமல், ஒரு இறுமாப்பில் கல்லூரி மாணவனாய்...
பெண் சகவாசமே இல்லாமல் கருப்பு வெள்ளை பட்டாம்பூச்சியாய் சுற்றி திரிந்தவன்... அதுவும் என் வசந்த காலம்... நண்பர்கள் படை சூழ தனி ராஜ்ஜியமே உருவானதாய் மிதப்பில் திரிந்த காலமது....
கரிய மேகங்களை கிழித்துக்கொண்டு பீறிட்டு வரும் மின்னல் போல... இரண்டாமாண்டு ரம்மியமாய் வந்தவள் என் தோழி...
முதன்முதலாய்
மென்மையாய் ஒரு நட்பு... என் மெல்லின நாயகியோடு...
ஆர்ப்பரிப்பாய் இருக்கும் என் நட்புலகில் ஒரு மயிலிறகாய் அவள்...
என்னை கொஞ்சம் கொஞ்சமாய் ஆட்சி செய்ய தொடங்கியவள்!
நட்பாட்சிக்கு புது விதிகளை வகுத்தவள்..
அவள் அன்பின் பாதிப்பில் அடிபணிந்தன என் குடிகாரத்தனமும் , முரட்டுத்தனமும்.....
மெல்லிய பூவுக்கு காவல்காரனாய் நான்... பறித்திடவும் , பருகிடவும் வந்த வண்டுகளிடம் சிக்கி சின்னாபின்னமாய் போனேன்... என் உள்ளங்கை உலகத்தில் இன்னும் பூ... தன வாசம் மாறாமல் மனம் வீசிக்கொண்டு இருப்பது... எனக்கு நானே ஆறுதல் படுத்திக்கொள்வதாய் உள்ளது....
வீசும் வரை காற்று...
சுடும் வரை நெருப்பு...
காதல் வருகின்ற வரை நட்பு...
காதலுக்கு ஆசைப்பட்டு அவள் சென்றதில் தவறில்லை... ஆசைப்பட்டதை அடைந்திட அவள் தேர்ந்தெடுத்த முறையில் மடிந்து போனவன் தான் நான்....
பிரிவென்ற ஒன்று எங்களிடையில் வந்து மூன்றாண்டு ஆகப்போகிறது...
இன்று அவள் நினைவாய் இருப்பது...
அவள் நினைவுகளும்... என் கையில் சிகரெட் ஏற்படுத்திய தழும்புகள் மட்டும் தான்....
அவள் அன்புக்கும் நட்புக்கும் சொந்தக்காரனாய் இருந்த நான்...
இன்று பீருக்கும் , பிராந்திக்கும் சொந்தம் !!!
இனி
நான் எண்ணப்போகும்
வாழ்நாட்களில்
உன் நினைவுகளும்
என் வேதனைகளும்
தீர்ந்துவிடும் நிலை வந்தால்
ஒரு பாட்டில் பீரும்,
ஒரே ஒரு சிகரெட்டும்
இந்த பிரபஞ்சத்தில்
மிச்சம் இருக்கட்டும்!
ஒவ்வொரு விஷயத்திலும் ஒடுக்கப்பட்டவனாய், வெறுக்கப்பட்டவனாய், ஒதுக்கப்பட்டவனாய்....
கை நிறைய சம்பளம் கொடுத்த பணி விடுத்து , ஒரு குடிகாரனை விட கேவலமானவனாய் என் நினைவுகளை
பிரேத பரிசோதனை செய்தபடி
எனதறையில் நான் !
என்னை விடுவித்துக்கொள்ள செய்யாத முயற்சிகள் இல்லை.. பலன் கிடைக்காமல்.... நாதாரித்தனமாய் ஊர் சுற்றிக்கொண்டு...
கடைசி பக்கம்:
தினம் முடிகின்ற இரவு... ஒரு விடியலுக்காக தான்.... என்னில் எதிர்மறையாய்... இரவு விடிவதே இல்லை....
ஒரு விடியலுக்காய் காத்துகிடக்கும்...
உங்கள் அன்பன்....
The Second Mother (2015)
9 ஆண்டுகள் முன்பு


