வெள்ளி, 20 நவம்பர், 2009

இம்சைராசா:

 உன் மௌனம்
என் மரணத்தின்
நிகழ்கால
ஒப்பாரி...
**

இத்தனை
வருடமாய்
கற்றுக் கொண்ட
என் வாழ்க்கை
ஒற்றை நொடியில்
முடியும் முன்...
நீ
காதலிக்கக்
கற்று கொள் !
**

வார்த்தைகளில்
அடக்க முடியாத
என் வாழ்க்கையினை
உன் மௌனத்தில்
அடக்கி விடுகிறாய் ......
**

நீ என்
கனவில் வந்தாய்
விடியம்
எழும்பிப் பார்த்தேன்
என் கட்டில்
நிரம்ப
கவிதை
நிரம்பிக்
கிடந்தது
**

இத்தனை
வருடமாய்
நான் பிறந்து
கொண்டிருந்தேன்
நீ பார்த்த
போதுதான்
என் பிறப்பு
முற்றுப் பெற்று
வாழத்
தொடங்கினேன்...
**

இனிமே உன் வாழ்க்கை டாஸ்மாக்லயும் பார்க் பெஞ்சிலும் தான் மாமு.....

இரவு வணக்கம்.

மக்கள் கவிஞர்.சுட்டபழம்.

கவிதை உதவி. மயாதி

புதன், 18 நவம்பர், 2009

மன்னை முத்துக்குமார்

விபச்சாரத்திற்குக் காரணம்.....

ஆண்களின் ஆணவமே விபச்சாரத்திற்குக் காரணம்



‘விபச்சாரம்' என்பதற்குச் சாஸ்திரங்களில் கூறப்படும் பொருள் பலவகையாகும். பொதுவாக, இப்பொழுது "பொருள் வாங்கிக் கொண்டு ஆடவர்களின் இச்சையைப் பூர்த்தி செய்வதையே தொழிலாகக் கொண்டு ஜீவனம் பண்ணுவதையே விபச்சாரம்' என்று உலக மக்கள் எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. பொருள் பெறாமல் சிற்றின்ப ஆசையுடன் கண்டவர்களையெல்லாம் காதலிக்கும் ஆண்களின் செய்கையையும் பெண்களின் செய்கையையும் "விபச்சாரம்' என்றே கூறலாம்.

ஜன சமூகத்தை அரித்துக் கொல்லும் புழுக்களில் ‘விபச்சார'த்தைப் போன்ற வேறொரு கொடிய புழு இல்லையென்றே சொல்லலாம். பண்டைக்காலந்தொட்டு வழங்கி வரும் அநேக தீய விஷயங்களில் ‘விபச்சார'மும் ஒன்றாகும். இந்த ‘விபச்சாரம்' என்னும் கொடிய வழக்கம், இன்று நேற்று ஏற்பட்டதல்ல என்பதையும், பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே நமது நாட்டில் நிலைத்து வருகிறதென்பதையும் அறியலாம்.

சிற்றின்ப வேட்கை கொண்ட முரட்டு ஆண்கள் பலரால் பலவந்தப்படுத்தப்பட்டு விபச்சாரியானவர்கள் பெருகியே விபச்சாரிகள் அதிகமானார்கள் என்று கூறுவது, எவ்வகையிலும் பொருந்தாமற் போகாது. இரண்டாவது, சமூக வாழ்க்கையில் ஏற்படுத்தப்பட்ட பல கொடுமையான சட்ட திட்டங்களும் விபச்சாரத்தை மிகுதிப்படுத்தின என்பதில் அய்யமில்லை.

காதல் மணமில்லாமை, விதவை மணம் இல்லாமை, விவாக விடுதலை உரிமை இல்லாமை, பெண்களுக்குச் சொத்துரிமை இல்லாமை முதலிய சமூகக் கட்டுப்பாடுகள், பெண்கள் விபச்சாரிகளாவதற்கு முக்கிய காரணமாயிருப்பனவாகும். ஒருவர் மேல் ஒருவர் காதல் கொள்ளாத ஒரு தம்பதிகளின் வாழ்க்கை, தூய வாழ்க்கையாக இருப்பது கஷ்டம். அத்தம்பதிகள் இருவரும் தங்கள் மன இச்சையைத் தகாத வழியில்தான் பூர்த்தி செய்து கொள்ள நேரும்.

பருவ காலத்தில் விதவையான பெண்களைச் சாஸ்திரங்களின் மேலும், மதத்தின் மேலும் பழி சுமத்தி மணஞ்செய்து கொடாமல் வைத்திருப்பதனால் விளையும் விபச்சாரக் கொடுமையை அளவிட்டுக் கூற யாரால் முடியும்? இன்று குளங்களிலும், ஆறுகளிலும், கிணறுகளிலும், சாக்கடைகளிலும், குப்பைத் தொட்டிகளிலும் எறிந்து கொல்லப்படும் குழந்தைகளெல்லாம் விபச்சாரிகளாலும் விதவைகளினாலும் பெற்ற குழந்தைகள் என்பதை யார் மறுக்க முடியும்? வீட்டுக்கு வீடு விதவைகள் குடி கொண்டிருக்கும் ஜாதியில்தான் விபச்சாரங்களும், சிசுக் கொலைகளும் அதிகம் என்று அறியாதார் எவர்?

ஆகவே, உண்மையில் விபச்சாரம் ஒழிய வேண்டுமானால், ஆண்களுடைய ஆணவத்தை அடக்குவதற்கும் பெண்கள் சுதந்திரமாகிய காதல் மண உரிமை, விவாக விடுதலை உரிமை, விதவை விவாக உரிமை, சொத்துரிமை முதலியவற்றிற்கும் சட்டங்களின் மூலம் பலவந்தமாக உதவி செய்ய வேண்டும். இப்பொழுது பல நாடுகளிலும் விபச்சாரத்தை ஒழிப்பதற்குச் சட்டங்கள் செய்யப்பட்டு அமுலிலும் இருந்து வருகின்றன. ஆனால், விபச்சாரத் தடைச் சட்டம் அமுலில் இருக்கும் எல்லா நாடுகளிலும் அது அடியோடு ஒழிந்து விட்டது என்று கூறத்தகாது. ஒருகால் இந்தியாவைத் தவிர, மற்ற தேசங்களில் விபசாரத்தடைச் சட்டத்தினால் அதை அடியோடு நிறுத்தி விடக்கூடும். ஏனெனில் இந்தியாவைத் தவிர, மற்ற இடங்களில் நடைபெறும் விபச்சாரம் வெளிப்படையானவை. வெளிப்படையாக வியாபாரம் போல் நடைபெறும் விபச்சாரத்தைத் தடுப்பது எளிது. ஆனால், நமது நாட்டில் நடைபெறுவது போன்ற மறைமுகமான விபச்சாரங்களைத் தடுப்பது முடியாது. விதவைகள் செய்யும் விபச்சாரத்தையும், விவாக விடுதலை செய்து கொள்ள முடியாமல் பேருக்குத் தம்பதிகளாக வாழும் குடும்பங்களில் நடைபெறும் விபச்சாரங்களையும் எப்படித் தடுக்க முடியும்?

மேல் நாடுகளில் ரஷிய தேசம் ஒன்றில்தான் அடியோடு விபச்சாரம் ஒழிந்து விட்டதாகச் சொல்லப்படுகிறது. இதற்குக் காரணம், ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமூக வாழ்க்கையில் எத்தகைய வேற்றுமையும் இருப்பதற்கு இடமில்லாமல், சட்ட மூலம் ஏற்பட்டிருக்கும் சவுகரியமேயாகும்.

ஆகையால் மற்ற நாடுகளைப் போல், ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமூக விஷயங்களில் எத்தகைய வித்தியாசமும் இல்லாமல் சம சுதந்திரம் ஏற்படுத்தி, அதை அனு÷பாகத்தில் கொண்டு வருவதன் மூலம்தான் விபச்சாரத்தை அடியோடு ஒழிக்க முடியும் என்பதில் சிறிதும் அய்யமில்லை.

மதப்புரட்டுகளையும் சாஸ்திரப் புரட்டுகளையும் நம்பி பெண்களைக் கொடுமைப்படுத்தி விபச்சாரத்தனத்திற்கு ஆளாக்கிக் கொண்டிருக்கும் இந்த மடையர்களான வைதீகர்களும், பகுத்தறிவற்றவர்களும், நமது நாட்டில் அரசியல் விஷயங்களிலும் செல்வாக்குப் பெற்றிருக்கும் வரையிலும், விபச்சாரத்தை ஒழிப்பதற்கு எத்தகையச் சட்டங்கள் செய்யப்பட்டாலும் அவைகளுக்குத் தகுந்த முழுப்பலனும் கிடைக்க முடியாதென்றே கூறுவோம்.

‘குடி அரசு' இதழின் தலையங்கம் 29.5.1932
செவ்வாய், 10 நவம்பர், 2009

மன்னை முத்துக்குமார்.

கடவுள்.....

.
மதமும், கடவுளும் மனிதனை முட்டாளாக்கும் கருவிகள்.

மனிதனுக்குள் கடவுளைப் புகுத்துவது மனிதனை முட்டாளாக்கும் டானிக்(வைட்டமின் சத்து) ஆகும். இதை இன்று பார்ப்பனர்கள், சங்கராச்சாரிகள் கடவுள் பிரசாரம் செய்வதில் எடுத்துக் கொள்ளும் முயற்சியில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.கடவுள் மனித நலத்துக்காகக் கண்டு பிடித்த சாதனம் அல்ல. மனிதனை முட்டாளாக்குவதற்குப் பயன்படுத்தும் சாதனமேயாகும். சூரியனை, சந்திரனை நெருப்பை, நீரை, காற்றை, கல்லை, மண்ணை எந்த மனிதனும் கண்டுப்பிடிக்கவில்லை.
அவற்றின் பெயர்களைத்தான் மனிதன் தெரிந்து கொண்டான்.இவற்றிற்கு விளக்கம் தேவை இல்லை. காரண காரியங்கள் தேவையில்லை. மனிதன் என்றால் இவைகளை அறிந்தே ஆகவேண்டும். இவற்றின் பலனை அனுபவித்தே ஆக வேண்டும்.ஆனால், கடவுள் அப்படி அல்ல;
ஒருவன் சொல்லி அதுவும் சொல்லுவது மாத்திரமல்ல, நம்பும்படி செய்து, நம்பும்படி செய்வது மாத்திரமல்ல, நம்பும்படி கட்டாயப்படுத்தி மனித மூளைக்குள் புகுத்தியாக வேண்டும்.இந்தக் கதி சர்வ சக்தியுள்ள "கடவுளுக்கு" ஏற்பட்டது பரிதாபம்! மகா பரிதாபம்!கடவுள் கதை ஒரு முட்டாளுக்குத் தோன்றிய தோற்றம். இது உலக அறிவையே பாழாக்கிவிட்டது.

அதாவது சிறு குழந்தை கையில் கிடைத்த நெருப்புப்பந்தம் வீட்டையே, ஊரையே எரித்து சாம்பலாக்கியது என்பது போல் கடவுள் எண்ணம் அறிவையே கொன்று விட்டது என்று சொல்லலாம்.கடவுள் என்பது "பிடிக்குப்பிடி நமசிவாயம், (நமசிவாயம் என்றால், இங்கு ஓன்றும் இல்லை; சூனியம் என்றுதான் பொருள்)அது "கடவுள்" என்றால் ஒரு "சக்தி," "சக்தி கூட அல்ல;" "ஒரு காரணம்" "காரணப் பொருள்கூட அல்ல" அப்படி நினைப்பது,


நினைத்துக் கொள்வது மனிதனுக்கு ஒரு "சாந்தி" என்பதாக கா.சு.வும் ( M.L .பிள்ளை), திரு.வி.க.வும் சொன்ன விளக்கம் - இதை பழைய "குடிஅரசு" இதழில் காணலாம்.
ஆனாலும் இவர்கள் விக்கிரக பூசையும், பட (உருவ) பூசையும் செய்து வந்தார்கள். கடைசியாக மாற்றிக் கொண்டார்கள்.
மனிதனுக்கு எதற்காக கடவுள் தேவைப்பட்டது என்பது எனக்கு இன்னமும் விளங்கவில்லை. அதிலும், கடவுளை நம்பும் எவனும் அதன் சர்வ சக்தியில் நம்பிக்கை வைப்பதே இல்லை. எவனும் சம்பிரதாயத்திற்காக "கடவுள் செயல்" என்கிறானே தவிர, காரியத்தில் மனிதன் செயல் என்றும், இயற்கை என்றும், அகஸ்மாத், தற்சம்பவம், ஆக்சிடெண்ட் என்றும் தான் முடிவு செய்து கொண்டவனாகிறான்.

சர்வம் கடவுள் செயல் என்று சொல்லுகின்ற எவனும் சர்வத்திற்கும் தற்காப்பு செய்து கொள்ளாமல் இருப்பதில்லை. சர்வம் கடவுள் செயலாயிருக்கும் போது நாஸ்திகன் - கடவுள் இல்லை என்பவன் எப்படித் தோன்றினான் என்பது பற்றிச் சிந்திப்பதில்லை.மற்றும் சர்வத்திலும் வியாபகமாக இருக்கிற கடவுள் மக்களுக்கு ஏன் தான் இருப்பதாக, தன்னைத் தானாகத் தெரிந்து கொள்ளச் செய்ய முடியவில்லை என்பதை சிந்திக்கவே மாட்டேன் என்கிறான்.கிருஸ்து பாதிரி இந்தக் கேள்விக்குப் பதிலாக "கடவுள் மனிதனுக்கு அறிவைக் கொடுத்துவிட்டான்;
அந்த அறிவைக் கொண்டு கடவுளைத் தெரிந்து கொள்ள வேண்டியது மனிதன் கடமை" என்று சொல்லிவிட்டார்.உன் அறிவுக்கு எட்டிய கடவுள் ஏன் என் அறிவுக்கு எட்டவில்லை? என்று கேட்டதற்கு, "பாபஜன்மங்களுக்கு எட்டாது" என்று சொல்லிவிட்டார்.

அந்த பாபஜன்மங்களை யார் படைத்தது?

படைத்தது கடவுளானால் பாபஜன்மங்களை ஏன் படைத்தார்? கடவுள் பாபஜன்மங்களைப் படைக்கவில்லையானால், பாபஜன்மங்களைப் படைத்தது யார்? என்று கேட்டேன்."சாத்தான் படைத்தான்" என்றும், மற்றும் அவருக்கே புரியாத எதை எதையோ யோசித்துப் பேசினார்.இஸ்லாத்தின் கதியும் இப்படித்தான். இந்துவின் கதியே மும்மூர்த்திகள் ஓங்காளி, மாரி, காத்தவராயன், மதுரை வீரன், கருப்பண்ணன், ஆழ்வார்கள், நாயன்மார்கள், சமாதி, கல்லுகள், படங்கள், பட்சிகள், மிருகங்கள், மரங்கள், சாணி (மூட்டை உருவ), உருண்டைகள், செத்துப்போன மனிதர்கள் முதலிய எத்தனையோ பண்டங்கள் கடவுள்களாக வணங்கத்தக்கவைகளாகவும் இருந்து வருகின்றன.இவைகளை ஏன் சொல்லுகிறேன் என்றால் ஒரு சர்வ சக்தியுள்ள கடவுளுக்குத் தன்னைப்பற்றித் தெரிவித்துக் கொள்ள – தன் உருவத்தை விளக்க சக்தியில்லை என்பதைக் காட்டத்தான்.
பிறகு – முன்ஜென்மம் - பின் ஜென்மம், கருமம், விதி, நரகம், சொர்க்கம், வைகுண்டம், கைலாயம் இப்படி இன்னும் பல பைத்தியக்காரனுக்குக் கள் ஊற்றினது போல் உளறல் மேல் உளறல்கள்.
மனிதனுக்குப் பிறகு முதல் சாவுவரை எதத்னையோ துன்பமும், தொல்லையும், இருக்க இந்தக் கடவுள் கருமம் மோட்ச – நரகத் தொல்லைகள் ஒருபுறம் மனிதனைச் சித்திரவதை செய்கிறது.

மனிதன் (ஜீவ கோடிகள்) பிறப்புக்கும், வாழ்க்கைக்கும், சாவுக்கும் இடையில் அனுபவிக்கும் இன்பம், துன்பம், கவலை, தொல்லை முதலிய காரியங்களுக்கு அவசியம் என்ன? காரணம் என்ன? என்பதை எவனாலும் இதுவரை தெரிந்து கொள்ள முடியவில்லையே! இத்தனைக்கும் மனிதன் கழுதை, குதிரை, நாய், நரி, எருமை, யானை, புலி, சிங்கம், ஈ, எறும்பு முதலான எண்ணிறந்த ஜீவராசிகளைவிட அதிகமான அறிவு (பகுத்தறிவு) படைத்தவனாவான்.இந்தப் பகுத்தறிவின் பயனால்தான் மற்ற ஜீவப்பிராணிகளுக்கு இல்லாத தொல்லையை மனிதன் அனுபவிக்கிறான். காரணம் இந்தப் பாழாய்ப்போன கடவுளால் தான் அதிகத் தொல்லை என்பேன்.

"உள்ளத்தைப் பங்கிட்டு உண்பது," "உழைப்பைப் பங்கிட்டுச் செய்வது" என்ற நிலை ஏற்பட்டால் கடவுளுக்கு, வேலையோ, அவசியமோ இருக்காது.
இப்போது கையில் வலுத்தவன் காரியமாகவும், அயோக்கியன் ஆதிக்கமாகவும் இருப்பதால், மனிதன் அறிவு இருந்தும் தொல்லைக்கும் துன்பத்திற்கும் ஆளாகிறான் - அடிமையாக வாழ்கிறான்.இனி ஒரு அய்ம்பது ஆண்டுக்குள் மனிதனுக்கு சராசரி வயது 100 – ஆகப் போகிறது. இது உறுதி. இப்பொழுதே பல நாடுகளில் சராசரி மனித வயது67- முதல் 74- வரை இருந்து வருகிறது. நமது நாட்டில் 1950– ல் சராசரி வயது 32- ஆக இருந்தது. இன்று 50- ஆக ஆகிவிட்டது. இதற்குக் காரணம் 1940– ல் படித்த மக்கள் நம்நாட்டில் 100– க்கு 9– பேராக இருந்தவர்கள் காமராசர் முயற்சியால் 100– க்கு 50– பேராக ஆனதுதான். அதோடு கூடவே, "கடவுளும்," "கடவுள் செயலும்" வெகுதூரம் குறைந்து மறைந்து வருவதும் தான் என்று சொல்லுவேன்.

கடவுள் மறைய மறைய மனிதனுக்கு அறிவு வளரும். சுதந்திரம் அதிகமாகும். நமது பெண்களுக்குப் அந்த பாப ஜன்மங்களை யார் படைத்தது? படைத்தது கடவுளானால் பூரண சுதந்திரம் இருக்குமானால் - வாழ்வில் சுயேச்சையும், சமத்துவமும் ஏற்படுதமானால், மனிதன் அறிவும், ஆயுளும் எல்லை இல்லாமல் வளர்ந்து கொண்டே போகும்.

இது தான் கடவுள் இரகசியம்."விடுதலை" - 03-11-1970 நாளிதழில் தந்தைபெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்.
ஞாயிறு, 15 நவம்பர், 2009
http://www.youtube.com/watch?v=MKLnGkHMr9k

மன்னை முத்துக்குமார்.


http://www.orkut.co.in/Main#Community?cmm=96231289

http://oomaiyinkural.blogspot.com/
---------------------------------------------
http://smuthukumaran.wordpress.com/
-------------------------------------------
"ஒவ்வொரு சொல்லிற்கும்,செயலுக்கும் பின்னால் ஒரு வர்க்கமும் வர்க்க நலனும் ஒழிந்துள்ளது."
--- - கார்ல் மார்க்ஸ்.

பறிபோன உரிமைகளை, பிச்சையாகப் பெற முடியாது. தீர்மானங்கள் மூலமோ, மன்றாடுவதன் மூலமோ, நியாயங்கள் பிறக்காது. ஆடுகளைத்தான் கோயில்கள் முன் வெட்டுகிறார்களே ஒழிய, சிங்கங்களை அல்ல!
-- டாக்டர் அம்பேத்கர்
---------------------------------------------
"உண்மையை உண்மையாகவும்
உண்மையல்லாதவற்றை உண்மை
அல்லாதவையாகவும் தெரிந்து கொள்
''
---- புத்தர்
---------------------------------------------
உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தை கண்டு உங்கள் உள்ளம் கொதித்தால் நாம் நண்பர்களே --- -சேகுவேரா
--------------------------------------------
நீ சொல்வதை நான் ஏற்கவில்லை,
ஆனால் அதை சொல்வதற்கான
உன் உரிமையை காக்க
என் உயிரையும் கொடுப்பேன்

--- வால்டேர்
-------------------------------------------
சில சமயங்களில் முடிவுகளைவிட முயற்சிகள் அழகானவை. பலன்களைவிட செயல்கள் மேன்மையானவை;.
--------------------------------------------
நாம் முன்னோக்கி பார்க்கவேண்டும் என்பதற்காகத்தான் கண்கள் முதுகு பக்கம் இல்லை.
---------------------------------------------
எவன் ஒருவன் தன் உரிமைகளை எப்பொழுதும் தற்காத்து கொள்ள தயாராக இருக்கிறானோ,
யார் ஒருவன் பொது விமர்சனத்துக்கு அச்சப்படாமல் இருக்கிறானோ,அடுத்தவன் கைப்பாவையாக மாறாமல் போதிய சிந்தனையும் சுய மரியாதையும் பெற்று இருக்கிறானோ -அவனே
சுதந்திரமான மனிதன் என்பேன்
.
---புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர்.
---------------------------------------------
நாம் எந்த ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை
நமது எதிரிகள் தீர்மானிக்கிறார்கள்

----மாவோ
---------------------------------------------
பாதையை தேடாதே, உருவாக்கு--லெனின்
---------------------------------------------
http://muthukumarann.wordpress.com/
--------------------------------------------

கவிதை உலகம்.
http://www.orkut.co.in/Main#Community.aspx?cmm=90238197
--------------------------------------------
தந்தை பெரியார்
http://www.orkut.co.in/Main#Community.aspx?cmm=60187514

புதன், 11 நவம்பர், 2009

இமலாதித்தன் பாலாஜி

தமிழன் இல்லாத நாடே இல்லை...ஆனால்...தமிழனுக்கென்று ஒரு நாடு இல்லை...
நானும் ஒரு வலைப்பதிவு வச்சிருக்கேன்.அதற்கான சுட்டி: http://www.tamilvaasal.blogspot.com/
முடி
ஞ்சா பாருங்க...
--------------------------------------------------------------------------
நான் தமிழன் என்று பெருமையாய் சொல்வதை தவிர என்னை பற்றி பெரிதாய் ஒன்றும் இல்லாததால்...............
----------------------------------------------------------------------------
உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தைக் கண்டு உங்கள் மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே - சேகுவேரா
----------------------------------------------------------------------------
நாம் எந்த ஆயுததை எடுப்பது என்பதை நமது எதிரிகள் தீர்மானிக்கிறார்கள் - மாவோ
----------------------------------------------------------------------------
நீ கவலைகளைச் சுமந்து கண்ணீர் சிந்துவதை விட, இலட்சியங்களைச் சுமந்து இரத்தம் சிந்து, உலகம் உன்னைப் போற்றும்.

பாதையை தேடாதே....... உருவாக்கு - லெனின்
--------------------------------------------------------------------------
கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும் - விவேகானந்தர்
--------------------------------------------------------------------------
தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே. தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது - லெனின்
------------------------------------------------------------------------
வீரமற்ற விவேகம் கோழைத்தனம்
விவேகமற்ற வீரம் முரட்டுத்தனம்

தேசியமும் தெய்வீகமும் நம் இரு கண்களாக இருக்க வேண்டும் - தேவர்
-------------------------------------------------------------------------
தோல்வியிலிருந்து நாம் தவறுகளை திருத்திகொண்டால் தோல்வியும் வெற்றிதான்
-மல்கொல்ம் போர்ப்ஸ்
--------------------------------------------------------------------
போரின் முடிவென்பது
இனத்தின் முடிவல்ல
எந்த இரவுக்குள்ளும்
பகல் புதைக்கப்படுவதில்லை

எந்த தோல்விக்குள்ளும்
இனம் புதைக்கப்படுவதில்லை
அழிந்தது போலிருக்கும் அருகம்புல்
ஆனால்
கண்ணுக்குத் தெரியாத வேர்கள்

அங்கே
சிந்திய துளிகள்
சிவப்பு விதைகள்
ஒவ்வொரு விதையும் ஈழமாய் முளைக்கும்
பீரங்கி ஓசையில்
தொலைந்து போன தூக்கணாங்குருவிகள்
ஈழப்பனை மரத்தில்
என்றேனும் கூடுகட்டும்!
- வைரமுத்து
-----------------------------------------------------------------------
ஈழ தமிழனுக்காய் எனது வரிகள் (அக்டோபர் 15, 2008 அன்று எழுதியது)

தோழா
என்று
அழைக்கத்தான்
ஆசைபடுகிறேன்...

நீ தோல் கொடுப்பாயென
நினைத்தால்
முதுகில் அல்லவா
குத்துகிறாய்...

ராணுவ தடவாளங்களை
கடன் வாங்கினாய்
தமிழர் பகுதிகளை
கலவர பூமியாக்க...

இப்போது
பூவனத்தையும்
கல்லறைதோட்டமாக்கிவிட்டாய்....
இங்கு பூத்த பூக்களையும்
இரத்த நாற்றம்
வீசவைத்துவிட்டாய்...

தமிழ் மண்ணை
அமிலங்களால் உமிழ்ந்துவிட்டாய்...
குளங்களை கூட
குருதிகளால் நிரப்பி விட்டாய்...
இறுதியாக
அணுகுண்டை வீசி பள்ளி
குழந்தைகளையும்
கொன்று குவித்துவிட்டாய்...
அடுத்து
வேறென்ன
சாதனை செய்ய
வெறி பிடித்து
காத்துக்கொண்டிருக்கிறாய்...

உன் மனநிறைவுக்கு
மண்ணையும் பிடித்துகொண்டாய்...
தமிழனை மண்டியிட
மல்லுகட்டுகிறாய்...
பூமாலையை எடுத்து
குரங்கு கையில் கொடுத்துவிட்டாய்....
தமிழனை அழிக்க தமிழனையே
ஆயுதமாக்கி விட்டாய் ...

தமிழின மக்களையும்
அகதிகளாக்கி விட்டாய்
அவர்களின்
வாழ்க்கையை அதோகதி ஆக்கிவிட்டாய்...

தமிழனை
ஆள விடாமல்தான்
தடுக்கிறாய்...
அவனை
அங்கு
வாழயாவது விடு...

தமிழனை
அசைக்கக்கூட
முடியாத நீ
அழிக்க முயல்கிறாயே
உனக்கேன்
இந்த வீண்முயற்சி?

எந்தமிழின
மக்களை
பதுங்கு குழிகளில்
உறங்க வைத்துவிட்டாய்...
பரவாயில்லை
' புலி '
எப்போதுமே
பதுங்கித்தானே
பாயும்...

தமிழன்
வீழ்ந்து விட்டானென
வீராப்பாய்
இருந்து விடாதே...

அது வீழ்ச்சியல்ல
அவன் விதைக்க படும்
தருணம்...

அறுவடை செய்ய
'முப்படையுடன்'
வருவான்
முன்னச்செரிக்கையாய்
இருந்துக்கொள்.

கதிரவனை கூட
கிரகணம் சிலமணி நிமிடங்கள்
ஆக்கிரமிக்க கூடும்...
அதனால்
கதிரவன்
காணாமல் போய்விடுமா?
நீ
கிரகணமாய் இருந்தால்
பரவாயில்லை
மன்னித்துவிடலாம்
உனக்க
கிரகமே
சரியில்லை
கொஞ்சம்
கவனமாய் இரு ...

கடலலை
வந்துவந்தான் போகும்
ஆனால்
ஆழி பேரலை வந்தால்
போய்விடும்
எல்லாமே
புரிந்து கொள்...
தமிழ்கடலை
கொந்தளிக்க வைக்காதே
தாங்கமாட்டாய்...

விரைவில்
விடியல் வந்துவிடும்
கனவும் கலைந்துவிடும்
உன்கதையும்
முடிந்துவிடும்!
- இமலாதித்தன்(பாலாஜி)

நான் இந்தியன் அல்ல "தமிழன்"

என்ன செய்வீர்கள் மிஸ்டர் இந்தியன்? - செழியன், கவிதைகள்

வீட்டுக்கு மேல் போர் விமானங்கள் பறக்க
குழந்தைகளை இழுத்துக்கொண்டு நீங்கள்
ஓடி ஒளியும்போது...
கண்ணெதிரில் உங்கள் வீட்டுப் பெண்கள் கற்பழிக்கப்படும்போது...
உங்கள் சகோதரன் சுட்டுக் கொல்லப்படும்போது...
பட்டினியால் உங்கள் பெற்றோர் இறக்கும்போது...
அப்போதுதான்
போர் என்பது புரியும் எனில்,
அதுவரைக்கும் தமிழர்களே கிரிக்கெட் பாருங்கள்.
அடுத்த தேர்தல் வந்துவிட்டது
வரிசையில் நின்று வாக்களியுங்கள்.

பயணத்தில் உங்கள் இருக்கையில்
இன்னொருவர் அமர்ந்துகொண்டு
எழ மறுத்தால் என்ன செய்வீர்கள்?
சாலையில் உங்கள் வாகனத்தை
இன்னொரு வாகனம் இடித்துவிட்டால்
என்ன செய்வீர்கள்?
உங்கள் குழந்தையைப் பள்ளி ஆசிரியர்
காயம் வர அடித்துவிட்டால் என்ன செய்வீர்கள்?
பேருந்தில் உங்கள் மகளை இன்னொருவர் உரசுவதைப் பார்த்தால் என்ன செய்வீர்கள்?
உங்கள் வீட்டுக்குள் அத்துமீறி
சில அந்நியர் புகுந்தால்
என்ன செய்வீர்கள் மிஸ்டர் இந்தியன்?
இறையாண்மை பேசுவீர்களோ?
இதற்கெல்லாம்...
எதிர்த்தலே தீவிரவாதம் எனில்
இலங்கையில் நடப்பதும் அஃதே நண்ப!
ஆர்ப்பாட்டம் நடத்தியாச்சு
ஒப்பாரி வெச்சாச்சு
கண்டனக் கூட்டம் முடிஞ்சுது
கவிதை வாசிச்சாச்சு
கட்டுரைகள் எழுதியாச்சு
ஓவியம் வரைஞ்சாச்சு
ஊர்வலம் போயாச்சு
மனிதச் சங்கிலி
அடையாள உண்ணாவிரதம்
வழக்கறிஞர் போராட்டம்
மாணவர் போராட்டம்
திரையுலகப் போராட்டம்
கடையடைப்பு.
தந்தி அடித்து
மெயில் அனுப்பி
எஸ்.எம்.எஸ். விட்டு
வேலைநிறுத்தம் செஞ்சு
பேருந்துகள் கொளுத்தி
தூதரகங்களை நொறுக்கி
ஜெயிலுக்குப் போயி
சாகும் வரை உண்ணாவிரதமும் இருந்து
அட! பதினேழு பேர் தீக்குளிச்சுச் செத்தும்போயாச்சு.
.....க்காளி... என்னதான்யா செய்யறது இனி!
------------------------------------
------------------------------
"ராஜீவ் காந்தி" கொன்றவர்கள் தீவிரவாதிகள்
"இந்திரா காந்தி"
"மகாத்மா காந்தி " கொன்றவர்கள் தேசியவாதிகளா????????????

வெள்ளி, 6 நவம்பர், 2009

ஈழம் வெல்லும்

உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தைக் கண்டு உங்கள் மனம் கொதித்தால் நாம் இருவரும் நண்பர்களே.

எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓரினம்
எல்லோரும் ஓர் விலை எல்லோரும் ஓர் நிறை.

யாதும் ஊரே யாவரும் கேளிர்.


எங்கள் நாட்டில்
எல்லா திசைகளில் இருந்தும்
கடல், அலைகளை
அள்ளி வருகிறது-ஆனால்
தென் திசை கடல்
மட்டும் அகதிகளை
அள்ளி வருகிறது.
பஞ்சாபிலிருந்து வந்தால்
"பஞ்சாபி"
ராஜஸ்தானிலிருந
்து வந்தால்
"ராஜஸ்தானி"
கேரளத்திலிருந்து வந்தால்
"மலையாளி"
பாகிஸ்தானில் இருந்து வந்தால் கூட
அவன் "பாகிஸ்தானி"
ஈழத்திலிருந்து வந்தால் மட்டும்
ஏனடா "அகதி" .
தமிழா திருந்து!
தமிழ் ஈழம் மட்டுமே
இந்த வலிகளுக்கெல்லாம்
மருந்து!!!!!

..!ஒப்பறேசன்!.. ..!தமிழீழம்!..

இனித்திடும் என் தேசம்
என் தேசமே
என் தாயாகமே-உன்னை
ஏங்கித் தவிக்கிறது
என் மனது

நான் முதல் முகலாய்
நடை பயின்றது-உன்
முத்து மேனியிலே

ஆசை ஆசையாய்
உன்னை அள்ளி உண்டு
உன் மேனியெங்கும்
உருண்டு புரண்டு-அப்பப்பா
எத்தனை கூத்துக்கள் கும்மாளங்கள்

எதனை அசைபோட
புளுதி மணல், பூவரசம் நிழல்
கொழுத்தும் வெயில்,
கோவில் மணியோசை
செம்புளுதி பூசிவரும்
பேரூந்துகள்.

ஏர் பிடிக்க
உழன்று வரும் காளைகள்
சேற்றுக்கள் நாற்று நடும்
சேலையர்கள்

வசந்த கீதம் பாடி
வருடிச் செல்லும் தென்றல்
ஆகா-நினைத்தாலே
இனிக்கும் என் தேசம்.

ஜீவனுள்ள காலம் வரை
ஜீரணிக்க முடியாத
நினைவுகளோடு......

தாய் மண்ணே!
உன்னை விட்டு பிரியும் வேளை
எம்முயிரை மட்டும் நினைத்தோம்.

நாம் வெல்வதற்கென்றெ
எம் காலடியில் கிடந்த
உன்னை............?

எம்மவர் குருதியில் குழித்தாய்
எத்தனை உடலங்கள் சுமந்தாய்
எம்மினத்தின் அவலக்குரல்கள்...
எமக்கான வலிகள் நீ சுமந்தாய்

எம் தேசம் விட்டு
பிரிந்த நாள் முதலாய்
இன்றும் கொடுமைகள் சுமக்கின்றேன்.

பொறுமையின் சிகரமே
பொறுத்திரு-எம்
தியாகங்கள் அர்த்தமற்றுப்போகாது
எங்கெங்கு வாழ்ந்தாலும்
என் ம்ண்ணே
என் கண் முன்.
...................................
......................
சுதந்திரம் தேடி ஓடுகின்றோம்!
சரித்திர புருசகர்களின் படங்களையும்
கதைகளையும் நாவல்களிலும்
திரைப்படங்களிலும் வாசித்தும்
பார்த்தும் வாழ்ந்த தமிழர்- நிய
வாழ்விலொரு உலகத்தின் முன்னிலையில்
தமிழர்களின் தலைவனோடு வாழ்ந்தோமெனச்
சொன்னாலது முப்படைகளின் நாயகன்- தமிழ்
செல்வங்களின் பாதுகாவலன் அதிபதித்தமிழன்
வேலுப்பிள்ளையின் கடப்பிள்ளை பிரபாகரனே தான்!

விதியோடு விளையாடிய விழியே...
வீரப் புலியோடு களம் கண்ட கதிரே...
உலகிற்கு தழிழ் மொழி காட்டிய குருவே...
எம் இனத்திற்கு தமிழ் ஈழம் காட்டிய உயிரே...

தமிழ் மானம் காத்த தங்கத் தலைவா_ உன்
பாதம் பட்ட தாய் மண்ணிற்கு...
ப‌ல்லாயிர‌ம் முத்த‌ங்க‌ள் ச‌ம‌ர்ப்ப‌ண‌ம்.
உன் வ‌ழி த‌னை ஒளியாய் மாற்றிட‌
தீப்பொறியாய் மாறிய‌ மா... வீர‌ர்க‌ளே...
த‌லை வ‌ண‌ங்குகின்றோம் ஈழ‌த்த‌மிழ‌ர் நாம்.

முப்ப‌து ஆண்டுக‌ள் மேல் உன் அனுப‌வ‌ம் க‌ண்டு
முன் ந‌க‌ர்வை முறிய‌டிக்காத‌ இல‌ங்கை அர‌சு
வ‌ல்ல‌ர‌சுட‌ன் கை கோர்ப்ப‌து நியாய‌மா...?
முக‌வ‌ரி ஒன்று முழுமையாய்க் கிடைக்க‌...
முப்ப‌டைக்கும் முக‌ம் கொடுக்கும் த‌ம்பி க‌ரிகால‌னே...
த‌லை வ‌ண‌ங்குகின்றோம் உல‌க‌த்த‌மிழ‌ர் நாம்.


வ‌ய‌தொன்று உன்னைக் க‌ட‌ந்தாலும்
வாழிப‌ கால‌த்தில் வ‌டித்த‌ இல‌ட்சிய‌ங்க‌ள்...
ந‌ன‌வாகும் நேர‌மிது
த‌மிழீழ‌த் தாக‌ம் த‌ணிய‌...
த‌ன் மான‌த் த‌மிழ‌ர் நாம்
த‌லை நிமிர்ந்து வ‌ருகின்றோம் போராட‌.

உள்ள‌த‌தால் உய‌ர்ந்த‌ ம‌னித‌ன் நீ...
உருவாக்குவ‌தில் இய‌ந்திர‌ ம‌னித‌ன் நீ...
மான‌ம் காக்கும் ம‌ற‌த் த‌மிழ‌ன் நீ...
ம‌த‌ங்க‌ள் போற்றும் மான‌த் த‌மிழ‌ன் நீ...
கால‌த்தால் அழியாத‌ அதிச‌ய‌ ம‌னித‌ன் நீ...
க‌ரிகால‌க் க‌ட‌வுளாய் அவ‌தார‌ மானிட‌ன் நீ...

உல‌க‌ம் உன்னைக் க‌ண்டு அச்ச‌ம்.
உன‌க்கு இருக்கிற‌து ஏதோ ம‌ச்ச‌ம்.
பார்வையால் ப‌லி எடுத்தாய் துரோகியை
கூர்மையால் ப‌டுகுழியில் வீழ்த்தினாய் எதிரியை
நேர்மையால் வ‌ளைத்துப் பிடித்தாய் த‌மிழ‌ரை _ எம்
நெஞ்ச‌ம் ஒருபோதும் ம‌ற‌வாது எம் த‌ங்க‌த் த‌லைவ‌ரை.......
அறத்தினை வெறுக்கில் ! மறத்தினைப் பொறுக்கிலீர் !
தாய் திருநாட்டைச் சந்தம் போற்றிப்
புகழொடு வாழ் மின் ! புகழொடு வாழ் மின் !
வாழ்க தமிழீழத்தின் தேசியத் தலைவர் நாமம் வாழ்க வாழ்கவே !!!

செவ்வாய், 3 நவம்பர், 2009

Anand ஆனந்த் "The Tamil TIGER"






இந்திய பேரரசின் கீழ் அடிமையாக இருக்கும் மற்றும் ஒரு கையாலாகாத தமிழன்...............

"Freedom is never voluntarily given by the oppressor; it must be demanded by the oppressed" - Martin Luther King Jr.


என்னை பற்றி எழுதும் அளவுக்கு இன்னும் எழுத்தாசிரியர் பிறக்கவில்லை, எழுதப்படும் அளவுக்கு நான் இன்னும் சாதிக்கவில்லை. காத்திருக்கிறேன் சாதனை செய்ய!!!

என் வாழ்கை, என் எண்ணம், என் பேச்சு, என் எழுத்து, என் மூச்சு அனைத்துமே எம் தமிழ் இன மக்களை நோக்கி தான்..
நான் இருக்கும் இடத்தில் இருந்தே ஏதோ ஒருவகையில் போராடி கொண்டே தான் இருக்கிறேன் என் இனத்துக்காக..
என்னை சுற்றிய கட்டமைப்புகளை உடைக்க முற்பட்டு தோற்றாலும் மீண்டும் உடைக்க முற்பட்டுகொண்டே இருக்கிறேன்...
விடியலை நோக்கிய என் பயணம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என் வாழ்நாள் முழுவதும்...

இந்த பறந்துட்ட இவ்வுலகில் எல்லோரையும் நேசிக்கிறேன் என் எதிரி உட்பட..

தமிழ் மக்களின் அடிமனதில் கிளர்ந்தெழும் தகிப்பாகத்தான் என் குரல் ஒலிக்கிறது. மொத்தத்தில், தன்மானத்தை விட்டுவிட்டு இந்தியப் பேரரசுக்குக் கப்பம் கட்டும் அடிமைத்தனத்தின் எடுத்துக்காட்டாக விளங்கும் தெம்பற்ற குறுநில அரசாகத்தான் தமிழகம் இருக்கிறது. இதைச் சொல்வதற்காக என்னைக் கைது செய்வார்களேயானால், இப்போதே சிறைக்குப் போகத் தயாராக இருக்கிறேன்.

குப்பத்து ராணி குருவம்மா

உன்னை நீங்கி நான் எங்கே செல்வது ?உன் உள்ளங்கையில் ரேகைக்குள்ளே ஒளிந்து கொள்வேனே

இந்த டுமீல் குப்பத்து ராணி நான்...


தேசம் அவர்களுடையதாகிவிட்டிருக்கையில்
நானதற்கு விசுவாசமாய் இருக்கமுடியாது

பேடியைப்போல்
வரைபடங்களுக்க
ு பின்னே ஒளிந்துத் திரியும் அவர்கள்
தேசம் தேசமென்று கொண்டாடுவதெல்லாம்
ஆக்கிரமித்திருத்திருக்கும் சொத்துக்களையும்
அனுபோகத்திலிருக்கும் உரிமைகளையுமே.

- ஆதவன் தீட்சண்யா

தெரியாத தேவதை விட, தெரிஞ்ச பேய் மேல்


இளமை இது ஒரு முறை தான், துளி மிச்சம் இல்லாமல் ருசிப்போம், கவலை இல்லை கபடம் இல்லை நாங்கள் கடவுளுக்கே வரம் குடுப்போம்.

"ராஜ்" 'பொய்யியல் நிபுணன்'


ஒன்று இரண்டாகி, இரண்டு நான்காகி, நான்கு பதினாறாகி...

விநாடிதோறும் சிதைந்து கொண்டிருக்கிறேன்.


ஒருபோதும் என்னால் மனிதனாக இருக்க முடியாது என்பதால்தான் என்னை பைத்தியம் என அழைத்துக் கொள்கிறேன். மனம் பிறழ்ந்த நிலையில் மட்டுமே வாழ நிர்பந்திக்கப்பட்ட நிலையில், வார்த்தைகளில் என்ன இருக்கிறது?

எனது மொழியை, எனது சிந்தனைகளை, எனது புத்தகத்தை, எனது காதலை, எனது காமத்தை... என்றுமே நான் தீர்மானித்ததில்லை. சுயமாக இருப்பதாகவும், சுயமாக சிந்திப்பதாகவும் நம்புவதில் இருக்கும் சுகமே 'பிதற்றலுக்கு' காரணம். நம்பிக்கைக்கும், அவநம்பிக்கைக்கும் மத்தியில் ஒவ்வொரு மைக்ரோ விநாடியும் ஊசலாடுவதில் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.


எனக்கான அப்பம் என்றைக்குமே என் கண்களுக்கு தெரிந்ததில்லை. கைக்கும் எட்டியதில்லை. ஆனால், அடுத்தவனுக்கு கிடைத்த அப்பம் நியான் ஒளியில் என் முன் விஸ்வரூபம் எடுத்து புன்னகைத்துக் கொண்டிருக்கிறது. எனக்கும் அது போல கிடைக்கும் என நம்பச் சொல்கிறது. இரவில் வெந்து தணியும் என் உடலுக்கு ஊடகத்தில் ஊசலாடும் பெண்களே மருந்து தடவுகிறார்கள். அல்லது 'யாரோ' அவர்களிடம் மருந்து போட்டுக் கொள்ளும்படி என் ஆளுமையை வளர்க்கிறார்கள். நான் யாருடன் பேச வேண்டும் என்பதை என் தொலைபேசிக்கு வரும் அழைப்புகளே தீர்மானிக்கின்றன. அந்த அழைப்பை ஏற்பதும், மறுப்பதும் மட்டுமே எனக்கு கிடைத்த சுதந்திரம்.


வார்த்தைகளின் தாக்குதலில் மனம் சிதைவுறும்போது பிதற்றல்களே மறுமொழியாகிறது. கனவுகளைக் கூட அதிகாரங்களே தீர்மானிக்கும் நேரத்தில் உரக்கச் சொல்கிறேன்...

நான் மனிதனல்ல. பைத்தியக்காரன்....

~~**குந்தவை நாச்சியார்**~~


* * சராசரி வாழ்கையை எதிர் பார்க்கும் ஒரு பெண் தான்
பெண்ணாக இருந்ததால் என்னவோ உண்மைக்கு குரல் கொடுத்து பேசுகையில் அடக்கத்தை எதிர்பார்க்கும் இந்த சமுகம் , குடும்ப பாரத்தை பொறுபேற்கும் பொது மட்டும் சமஉரிமை கொடுக்கும் அவர்களிடம் சராசரி வாழ்கையை எதிர்பார்த்து என்ன பயன் * * *
======================================================================================================================
பாசமாய் இருந்தால் ஏமாளி,
உணமையை கேட்டால் கோவக்காரி ,
அமைதியாய் இருந்தால் அழுத்தக்காரி,
விளையாட்டாய் இருந்தால் வேடிகைகாரி ,
நேர்மையாய் இருந்தால் பிழைக்கத் தெரியாதவள் ,

பல பெயர்களை கொண்டவள் தான் பெண் இனம்
[GREEN/]

விடுதலை பெறுவோம் அதுவரை தொடர்வோம்!!

நட்பு என்பது ஒத்த கருத்துள்ள இதயங்களை மட்டுமே விரும்புவது இல்லை...வேறுபாடுகளையும் மதிக்கின்ற தன்மையே

என்னை பிடிக்கின்றது என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே நீங்கள் எனது நண்பராக இல்லை..உங்களை உங்களுக்காக எந்த விதத்திலும் வழியிலும் நீங்கள் இருந்தாலும் அப்படியே ஏற்றுகொள்கிறேன்...அதையே நட்பென்கிறேன்.....

அன்பு நெஞ்சம் .......

***************************************



நெருக்கடி மிக்க வேளைதான் அனுபவத்தையும்
அறிவையும் பெற்றுக்கொள்ளும் காலம்.

- தலாய் லாமா.

****************************
நெஞ்சே!
துயரத்திலும் நன்மைகாண்
மரணம் வரைக்கும் சென்ற விதை
இன்னொரு ஜனனம் காண்பது போல ...

*************************************
மனித மனம் ரகசியங்கள் நிறைந்த
மர்ம புத்தகம்.
அதை யாரும் திறந்து விடவோ
எளிதில் படித்து விடவோ முடியாது

********************************

நீ! பெற்ற வெற்றிகள் அனைத்தையும் ஒரே சமயத்தில்
இழக்க நேரிடும் போதும் மீண்டும் திட சித்தத்தோடு
முயற்சியைத் தொடங்கவும் உன் தோல்வியைப் பற்றி ஒரு
வார்த்தைக் கூட முணுமுணுக்காமலும் இருக்க
முடியுமானால்;
நீ! ஒரு மனிதனாகச் சிறந்தோங்குவாய்!--

ருட்யார்ட் கிப்ளிங்" - 1865-1936

*******************************************************************

உதவி செய்ய முடியாத அளவிற்கு யாரும் ஏழையல்ல. உதவி தேவைப்படாத அளவிற்கு யாரும் பணக்காரரல்ல.

பின்லாந்து.

******************************************
**************************

பிறர் வாட பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப் பருவம் எய்தி
கொடுங்கூற்றுக் கிறையெனப் பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ......?

அருள்மொழிஅம்மு P.K.E.A.R.A.S.A.


நீ நேசிப்பதை யாருக்கு வேண்டுமானாலும் விட்டு கொடு ஆனால் உன்னை நேசிபவரை யாருக்க்காகும் விட்டு கொடுகதே

உலகில் ரசிக்க ஆயிரம்
இருந்தும் அனைத்தையும்
மறந்து ரசித்தேன்...........
உன் நினைவுகளையும்
உன்னையும்.................

நமதுதேசம் நாம் அடைவோம்,Errappan


!!!எமது மக்களைப் போகவிடு!!!



நேற்றெம் ஊரிருந்த காற்றில்

இதமான குளிரும்

நேர்த்தியான சுகமுமிருந்தது

சாணிமெழுகிய தலை வாசலில்

சந்தனக் காப்பென்னும் புனிதமிருந்தது.

வாசலிறங்கக் கோலமிருந்தது.

வயலில் நம்பிக்கை விளைந்தது.

வெளியே அறியப்படாத எத்தனையோ

உள்ளே வெளிச்சம் நல்கின.

அரைஞாண் கயிற்றுக் கோவணத்திலும்

குறுக்காகக் கட்டிய மாராப்பிலும்

நிறையும் மனமிருந்தது.

மின்சாரம் மினுங்காத ஒழுங்கைகளில்

இருளெனும் எழிலிருந்தது.

அள்ளிய ஒரு மிடறு நீரிறக்க

சுவாசம் சீராகும் சுகம் தெரிந்தது.

ஆலமரம் விசிறிய காற்றின் தாலாட்டில்

தேவ நிலை சித்தித்தது.

ஊர் நிறைந்த கோயில்மணி நாதமும்,

கூத்துப் பாட்டும்,

நாதஸ்வர மங்கலமும்

தூக்கித் தட்டாமாலை சுற்றிவிட்டு

எங்கே துரத்திப் பிடியென்பதாய் போயின.

சாவுக்கும் சடங்குக்கும் உருகியொழுக

பக்கத்திற் சுற்றமிருந்தது.

சனியானாற் பிடித்திழுத்து எண்ணை முழுக்காட்ட

அத்தைமார் இருந்தனர்.

புது வருடத்தன்று புளியமரக்கிளையேறி

அன்னவூஞ்சல் கட்டி ஆட்ட

அம்மான்மார் இருந்தனர்.

சின்னத் திரளிப் பொடியும்

வெள்ளி முரலும்

கூனி இறாலும் போட்டுக் குழம்பு வைக்க

குஞ்சாச்சிமா இருந்தனர்.

நிழல் விழுத்தும் முற்றத்துப் பூவரசின் கீழே

பல்லாங்குழியாட அம்மான்மகள்மார் இருந்தனர்.

தில்லையம்பலப் பிள்ளையார் கோயிலுக்குப் போய்வர

திருக்கல் வண்டிகள் இருந்தன.

என்ன இல்லையென்பதாய் எல்லாமுமிருந்தன.

தையெனிற் பொங்கல்.

சித்திரையிற் கஞ்சி.

ஆடியிற் கூழென

வாய்க்குக்கூட வரையறையிருந்தது.

அப்பனுக்கு மூத்தவன்

ஆத்தாளுக்கு இளையவனென

சாவுக்குப் பின்னுமொரு சங்கையிருந்தது.

ஆகக்கூடிய தொலைவுப் பயணமெனக் கதிர்காமத்துக்கு

அதுவும் கால்நடையாகப் போகும்

வடிவிலியங்கிய வாழ்வொன்றிருந்தது காலடியில்.

மாதமொரு கூத்திருந்தது கோயில் வெட்டையில்.

அதுவே போதுமெனத் தூங்கியெழுந்தன ஊர்கள்.

சூடடித்துக் குவித்த நெல்லும்

கிழித்துலர்த்திய ஒடியலும்

நிறைந்த நெஞ்சில் நித்திரையிருந்தது.

தழுவிப் போனது காற்று.

உருகி உள்ளேறியது உறவு.

கமல்ஹாசனும் சிம்ரனும் சொல்லித்தர முன்னரும்

இலந்தைமரக் காட்டு வெளியிடையும்,

புல்லாந்தியும் நாயுருவியும் சணைத்த

ஒற்றையடிப் பாதையிலும்,

வயல் வரப்பிலும்

வாய்க்காற் கரையிலும்

தோட்டவெளி ஆடுகாற் பூவரசின் கீழும்

இணைந்ததும் பிணைந்ததுமென

இருந்தது எம்மூர்களிலும் காதல்.

இன்று எல்லாம் தொலைத்து

இடருருவிக் கிடக்கிறது வனப்பு.

துக்கித்திருக்கிறது சோபிதம்.

முற்றத்து முருங்கை நிறைகாய்

சுமைதாங்காது கிளை முறிய

மரமும் பாறிச் சரிகிறது -

உருவிச் சப்ப ஒருவரில்லை.

கிணற்றடி வாழை குலை முற்றிக் கிடக்கிறது

ஒருவரில்லை உரித்துத் தின்ன.

இருந்ததை எண்ணி மகிழ்ந்ததுவாய்

இழந்ததை எண்ணி குமைந்ததுவாய்

உழவை எதிர்பார்த்துக் கிடக்கிறது ஊர்!

வீழ்வோம் என்று நினைத்தாயோ


"மற்றவர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காகத் தன்னை இல்லாதொழிக்கத் துணிவது தெய்வீகத் துறவறம். அந்த தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்."

-தமிழீழத் தேசியத் தலைவர்

"நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம்; அதற்கு எமது வீரர்களின்இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்."

-தமிழீழத் தேசியத் தலைவர்

"நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நூடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே. ஏமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டீன் வாழ்வே பெரியது."

-தமிழீழத் தேசியத் தலைவர்

வீரத்தமிழன் வெல்வான் ஈழத்தை

புலிப் படையின் அமைதிப் புறா மாவீரர் சுப. தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு எம் வீரவணக்கம்...
நவம்பர் 26 - தலைவர் பிரபாகரன் பிறந்த நாள்
நவம்பர் 27 - மாவீரர் நாள்
நவம்பர் 28 - என் பிறந்த நாள் (தமிழ் ஈழம் மலரும் நாள் - தலைவர் தனது மாவீரர் நாள் உரையில் தான் நாடு அடைந்ததை முறைப்படி அறிவிப்பார். தமிழ் ஈழம் அடைந்ததற்கான வெற்றி கொண்டாட்டம் நவம்பர் 28 ல் தான் நடைபெறும்)

செல்வ முருகன் உங்கள் நண்பன்

உலகில் எத்தனை 'கடவுள் ' இருந்தாலும்...!! 'உன்னை எனக்கு நண்பன்'அக,தந்த உன்"அன்னையும்,எனக்கு ஒரு 'கடவுள்'தான்..!

செல்வ முருகன் உங்கள் நண்பன்


எதையும் ரசிக்கும் மனம் கொண்ட மனிதனக்கு,,,..... வாழ்க்கையில் வரும் துன்பங்களும் இன்பமே!.... இந்த உலகத்தில் மனிதனால் முடியாதது எதுவுமில்லை,.... ஆனால் மனிதனால் முடியாதது... மனிதனாக இருப்பது தான்!!!..... சுவாமி விவேகனந்தர்.....
சாஸ்திரங்களை படித்துக் கொண்டு வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்காதே தோழமையே!... நீ செய்ய வேண்டிய சாதனைகள் உனக்காக உன் பாதையில் காத்து கொண்டிருக்கின்றன நீ புதிதாய் ஒரு சரித்திரம் படைக்க!".... எழுந்து வா..,எழுச்சி கொண்டு வா புரட்சி செய்ய வா புதுமைகள் படைப்போம் வா!...... என்று தணியும் இந்தச் சுத்திர தாகம்?
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?
என்றெம தன்னகை விலங்குகள் போகும்?
என்றெம தின்னல்கள்! தீர்ந்துபொய் யாகும்?

தொண்டு செய்யும் அடிமை!-உனக்குச் சுதந்திர நினைவோடா?
பண்டு கண்ட துண்டோ?-அதற்குப் பாத்திர மாவாயோ?
ஜாதிச் சண்டை போச்சோ?-உங்கள் சமயச் சண்டை போச்சோ?
நீதிசொல்ல வந்தாய்!-கண்முன் நிற்கொணாதுபோடா!
அச்சம் நீங்கினாயோ? அடிமை! ஆண்மை தாங்கினாயோ?
பிச்சை வாங்கிப் பிழைக்கும்-ஆசை பேணுத லொழித்தாயோ?
கப்பலேருவாயோ-அடிமை! கடலைத் தாண்டுவாயோ?
குப்பை விரும்பும் நாய்க்கே! அடிமை!
கொற்றத் தவிசுமுண்டோ?
ஒற்றுமை பயின் றாயோ? அடிமை!
உடம்பில் வலிமை உண்டோ?
வெற்றுரை பேசாதே!-அடிமை!
வீரியம் அறிவாயோ? சேர்ந்து வாழு வீரோ?-உங்கள்
சிறுமைக் குணங்கள் போச்சோ?
சோர்ந்து வீழ்தல் போச்சோ?-உங்கள்
சோம்பரைத் துடைத்தீரோ
வெள்ளை நிறத்தைக் கண்டால்-பதறி
வெருவலை ஒழித்தாயோ?
உள்ள துசொல்வேன் கேள் சுதந்திரம்
உனக்கில்லை மறந்திடடா!
நாடு காப்ப தற்கே-உனக்கு
ஞானம் சிறிதுமுண்டோ?
வீடு காக்கப் போடா!-அடிமை!
வேலை செய்யப்போடா!
சேனை நடத்து வாயோ!-தொழும்புகள்
செய்திட விரும்புவாயோ?
ஈனமான தொழிலே உங்களுக்கு
இசைவதாகும் போடா!
இதை படிக்கும் சூடு சுரணை உள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் உறைக்கும், தமிழன் எப்படி அடிமையாய் இருக்கிறான் என்பதையும் அறிய வைக்கும் பாரதியாரின் பாடல் இது!... அடிமை விளங்கினை உடைத்தெறிவோம்.., அறிவோடும் ஒற்றுமையோடும் நம்மினம் காப்போம் தோழர்களே!... அடிமை வாழ்கையும் அறியாமை வாழ்கையும் போதும் உடன்பிறப்பே.., புரட்சி செய்து சுதந்திரம் பெற்று புது வாழ்வு வாழ்வோம் வா!.... சாது மிரண்டால் காடு கொள்ளாது! தமிழர்கள் எழுந்தால் இந்த தரணி கொள்ளாது! தமிழ் நாட்டுப் பெருங்கடலில் இருந்து தமிழர்கள் எனும் புயல் புறப்பட்டால்.. இந்தியாவும் இருக்காது எங்கள் காலடியில் தொங்கும் இலங்கையும் இருக்காது அடியோடு அழித்து விடுவோம்!
தமிழர்களாகிய எங்கள் மீது ஏறி மிதித்துக் கொண்டிருக்கும் அந்நியச் செந்நாய்களே!.. சிரியுங்கள் கடைசியாக சிரித்துக் கொள்ளுங்கள்..ஏனென்றால் நாங்கள் எழும்போது உங்கள் உடலை இரண்டாகப் பிளந்துக் கொண்டு எழுவோம்..சிரித்த உங்கள் வாய்கள் கிழிக்கப்படும்!...
தமிழர்கள் நாங்கள் கொட்டக் கொட்ட குனிபவர்கள் அல்ல.. குனிந்து வீரமூட்டும் எங்கள் தாய் மண்ணை எடுத்து நெற்றியில் திலகமிட்டு, எதிரிகளின் குடலை உருவி வெற்றி மாலையாக சூடுபவர்கள்!...
வீரத்திற்கு இலக்கணம் எழுதிய எங்களையே வீழ்த்த முடியுமா முட்டாள்களே!.. வீழ்த்துவது எப்படி என்று வ்யூகம் அமைத்த எங்கள் மீதே சதி வேலையா சண்டாலர்களே!...
அடிமைகள் அல்ல தமிழர்கள்!.. அடங்கா சினம் கொண்டு கொண்டு எழுந்து தங்கள் எதிரிகளை அடியோடு அழிப்பவர்கள்!

திங்கள், 2 நவம்பர், 2009

எழும் ஈழம் .... தமிழ் ஈழம் ........

அடங்க மறு,,
அத்து மீறு ,
திமிரி எழு,
திருப்பி அடி .....

அண்ணலே இனியும் நாங்கள் ஆடுகள் அல்ல ..
சீறி பாயும் சிங்கமடா ^^^

சாதியும்,சாதிஇன் இழிவையும் ..
துடைத்தெரிய போராடாமல் ,
இருப்பதை விட .......
செத்து ஒழிவதே மேலானது ...
புரட்சியாளர் ---டாக்டர் அம்பேத்கர் ........


ஈழத்திலே ஒரு தலைவன் ,
தமிழகத்திலே ஒரு தலைவன் ,
இருவருமே ஒருவனடா
மானமுள்ள தமிழனடா ....
-- பாவலர் - அறிவுமதி


உணர்வுகள்
-----------------
உயிரை இழந்தோம்
உடலை இழந்தோம்
உணர்வை இழக்கலமா ?

உணர்வைகொடுத்து..
உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா ?..

தோல்வி நிலையென நீ நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா ?..

யுட்தங்கள் தோன்றட்டும் ..
ரத்தங்கள் சிந்தட்டும்
பாதை மாறலாமா ?...
ரத்தத்தில் ரத்தத்தில் அட்சங்கள் வேகட்டும் ..
கொள்கை மாறலாமா ?

உடல் முழுவதும் வீரம்
பின் ஏன் கண்ணின் ஓரம் ஈரம் ...

விடியலுக்கு இல்லை தூரம்
இனியும் மனதில் ஏன் பாரம் ..........................
வாசிக்க கிடைக்காத வரலாருகளைத் தின்று செரித்து ..
நின்று சிரிக்கும் நிஜம் ......

நிறந்தரம்
------------
நேற்று என்பது உடைந்த பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று மட்டுமே உன் கையில் கிடைத்த வீணை .............


செயல்படுவதற்கு முன் சிந்தனை செய் ....
செய்து விட்டு சிந்திக்காதே ......

இனிதே கிடைக்கும் இன்பத்தை விட ..
போறாடி தோற்கும் வலி திடமானது .......

வெற்றி என்பது எளிதல்ல ..
தோல்வி என்பது நிலையல்ல .....

போதை அற்று வாழ் .. ஆனால்
பேதை அற்று வாழதே ................

நட்பின் நினைவலைகள்
------------------------
ஓடிவிளையாடிய பொழுதை
மறக்கமுடியுமா ?
வீட்டு பாடம் செய்யாமல் முட்டி போட்டதை
மறக்க முடியுமா ?
கால் கடுக்க மிதிவண்டி மிதித்ததை
மறக்க முடியுமா ?
ஒரு மூடி உணவை சிந்தாமல் சிதறாமல்
பகிர்ந்து கொண்டதை மறக்கமுடயுமா ....
மிதிவண்டி பெல் சத்தம் கேட்டவுடனே
தபால் காரனை கடத்தி
நம் தேர்ச்சி ரகசியத்தை பார்த்ததை மறக்கமுடியுமா ...
ஏனோ மாறிவிட்டது நம் சூழ்நிலைகள் .........
அவசரமான இந்த சூழலில் நம்மை மார்டிகிட்டோம்
பார்த்து பல நாளாகியும் ..பார்த்தவுடன் ஹாய் ......
சந்தித்து வெகு நேரமாகியும் சிந்திக்கிறோம்
வார்த்தைகள் பேச ..
எங்கே போனது நம் இனிமையான ஸ்வாரியசங்கள் ....
எதிர்பார்ப்புகளோடு பெருமூட்சு விடுகிறது
நம் இதயத்தின் சுவாச காற்று..................................
.

நானும் ஒரு வண்ணத்துப்பூச்சி

பூக்களில் தேன் தேடி
சுற்றித் திரியும்
வண்ணத்துப் பூச்சி போல

மனித மனங்களில்
அன்பைத்தேடி
சுற்றித் திரியும்
நானும் ஓர்
வண்ணத்துப் பூச்சி தான்!

உங்கள் மனமதில்
அன்புத் தேனைத் தேடி
வந்திருக்கின்றேன்...

எனக்கும் உங்கள்
இதய வாசலில்
வழிவிடுங்கள்...!

***
நான் படித்து ரசித்த கவிதை!!

வண்ணத்துப் பூச்சிகளாய்
வந்து போகும்
வாழ்க்கை வேண்டும்...

எந்த பூவுக்குள்
தவம் செய்தால்
வண்ணத்துப்பூச்சியாய்
பிறக்க முடியும்?

வீடுகள் கட்டுவதில்லை
தட்டுத்தடுமாறி
வீட்டுக்குள் வந்தாலும்
விட்டு விடுதலையாகி
வெட்டவெளி வந்தடையும்!

கருப்பு நிறத்தை
வெறுப்பதில்லை...

பூக்களற்ற தனிமையின்
வெறுமையில்
தற்கொலைக்குத்
துணிவதில்லை...

பட்டாம்பூச்சியின்
கண்ணீர்பட்டுத்
தெறித்ததில்லை
எந்த பூவிலும்!

பூவிற்குள் பூவாகிப்
புணரும் அழகில்
ஆன்மக் கலப்பின்
மேன்மை சொல்லும்,

பூக்களை
விதவைகளாக்காமல்
செத்துப் போகும்,

சிறகைப் பிய்க்கும்
குழந்தையின்
சந்தோஷத்திற்காய்
ஒரு கவிதை போல்
கிழிந்து போகும்!

சொல்லுங்கள் -
எந்த பூவுக்குள்
தவம் செய்தால்
வண்ணத்துப்பூச்சியாய்
பிறக்க முடியும்???

வே.பசுபதி * (PASUPATHI)மே /ப ஈரோடு

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்

Kalki *|* கல்கி

-----------------------------------

Gree
tings.. I am Kalki, a Tamil girl and am very proud of that.

I am second type woman - means, certainly not a biological woman but a proud transgender woman.

For more information about me and what do I, visit my official blog page : http://kalki.tblog.com

எனது தமிழ் பதிவுகளுக்கு www.sahodari.blogspot.com

I am a transgender rights activist, on a mission celebrating my womanhood. I am the Director of Sahodari Foundation and working in the mainstream and web media as well.

போர்க்களம்! எல்லையில் என் துப்பாக்கி...,

வெல்வோம். வாழ்வோம். வரலாறாவோம்."தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்"
=================

எல்லையில் என் துப்பாக்கி
எழுந்து நிற்பதால்
எழுந்துவர
என்னால் முடியவில்லை.
-------------------------------

ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது தன்னே ரிலாத தமிழ்!
----------------------------------
----

என்னை
என் மண்ணில்
புதைத்தாய்...

பகைவனே!

என் மண்ணை
எங்கே
புதைப்பாய்?
-வேலுப்பிள்ளை பிரபாகரன்
--------------------------------

"அடிமையாக வாழ்வதைவிட சுதந்திரமாகச் சாவது மேலானதடா தம்பி... பயந்து பயந்து வாழ்வதைவிட ஒரு நொடியேனும் வீரமாகப் போராடி வாழ்ந்து சாவதே மேலானது"
-வேலுப்பிள்ளை பிரபாகரன்
-----------------------------

சாவில் தமிழ் படித்து சாகவேண்டும்! என் சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும்!
--------------------------------------

தேமதுர தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்
-------------------------

உடலியக்கும் நல்லுயிரே, உயிரியக்கும் நுண்கலையே, மக்கள் வாழ்வாம்
கடலியக்கும் சுவைப்பாட்டே, கண்ணான செந்தமிழே, அன்பே, நாட்டில்
கெடலியக்கும் நெஞ்சுடையார் துறைதோறும் நின்னெழிலைக் கெடுக்கப் பாடு
படல்தன்னை நினைக்கையிலே நெஞ்சுபதைக் கும்பகர வாய்ப் தைக்கும்.
---

கூற்றமென வாழ்வதுவோ தமிழுக்கே ஏடெழுதும் கூட்டம்? தீமை
மாற்றவரும் அச்சகத்தார் வகைமறந்து போனாரோ? சொல்லாக் கத்தார்
தூற்றுமொழி ஏன்சுமந்தார்? துண்டறிக்கை யாளருமோ தீயர்? வாழ்வில்
ஏற்றமுற எண்ணாத தமிழருயிர் வாழ்வதினும் இறத்தல் நன்றே
---------------------------------

"தீர்வுகள் இல்லையென்றால்
கேள்வியே தப்பு - அழித்து எழுது!"
-----------------------

“ஆதியில் பர்மாவில் அடித்தார்கள் ஓடிவந்தோம்…. அப்புறம் பம்பாயில் அடித்தார்கள் ஓடிவந்தோம்…. எப்போஅதும் கர்நாடகாவில் அடிக்கிறார்கள் ஓடிவருகிறோம்… இப்போது மலேஅயாவில் அடிக்கிறார்கள் ஓடிவர ஆரம்பித்துவிட்டோம்…. எல்லா இடத்திலும் அடிவாங்கிய நாம் ஒரு இடத்தில மட்டுமே திருப்பி அடித்தோம், அது தமிழ் ஈழ மண்ணில் மட்டுமே…. “அடி வாங்கினால் நன்முறை, திருப்பி அடித்தால் வன்முறையா?…. அடிப்பவன் மிதவாதி திருப்பி அடிப்பவன் தீவிர வாதியா?
-சீமான்
--------------------------

எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்;
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்;
பண்ணிய பாவ மெல்லாம்
பரிதிமுன் பனியேபோல;
நண்ணிய நின்முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய்;
-பாரதி
----------------------------------

பூகோளம் என்பது நதிகள், மலைகள், பயிர் வகைகள், மக்கள் வாழ்க்கை என்பதைக் பற்றிக் கூறும் கல்வி என்றால் பலரைவிட நான் நன்கறிவேன். புத்தகப் படிப்புதான் பூகோளம் என்றால் அது எனக்குத் தெரியாது, அது எனக்குத் தேவையும்மில்லை.
- காமராஜ்
---------------------------

பிறந்து, வளர்ந்ததில் சொல்லிக் கொள்ளும்படியான சாதனைகள் எதுவும் இதுவரை இல்லை; உயிருடன் இருப்பதைத் தவிர..,
-------------------------

பெண்கள் அழகு என்பதையும்,
அவர்கள் தூரத்தில் மட்டுமே அழகு, என்பதையும் ஒருசேர உணர்ந்தவன்..
-------------------------------------------

வரிகள்.....,
=========

"தூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம்;
தூய தமிழரை தமிழ் கொண்டெழுப்பினோம்!"
~~~~~~~~~~~~~~~~~
அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா
மனதின் நீலம் எதுவோ, அதுவே வாழ்வின் நீலமடா
~~~~~~~~~~~~~~~~~~
அழகான கோலம் கூட
வாசல் தாண்டி உள் வருவதில்லை
~~~~~~~~~~~~~~~~~~~~~
நகைக்கும் அழகில்;
நகை தேவைப்படா!
~~~~~~~~~~~~~~~~~~~~~
காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல
வாயை மூடி அழுமே சொல்ல வார்த்தை இல்லை
~~~~~~~~~~~~~~~~~~~~~
மனிதன் என்னும் வேடம் போட்டு மிருகமாக வாழ்கின்றோம்
தீர்ப்பு ஒன்று இருப்பதை மறந்து தீமைகளை செய்கின்றோம்
~~~~~~~~~~~~~~~~~~~~
மனிதா உன் மனதை கீறி விதை போடு மரமாகும்
அவமானம் படு தோல்விகள் எல்லாமே உரமாகும்

கலைசெல்வி .

ere is the profile of the person whom i like the most
http://www.orkut.com/Profile.aspx?2uid=3849827725404266552...]
கீதாசாரம்

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,
அதுவும் நன்றாகவே நடக்கும்
உன்னுடையதை எதை நீ இழந்தாய்?
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைதிருந்தாய், அது வீணாவதற்கு ?
எதை நீ எடுத்து கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.

"இதுவே உலக நியதியும், எனது படைப்பின் சாராம்சமாகும்"

- பகவான்ஸ்ரீகிருஷ்ணர்

உங்கள்நட்புக்காக அருண் குமார்(ARUN)

about me:

¸.•♥´¨`♥•.¸¸.•♥´¨`♥•.¸¸.•♥´¨`♥•.¸¸.•♥¸.•♥´¨`♥•.¸¸.•♥´¨`♥•.¸¸.•♥´¨`♥•.
தங்களை அன்புடன் வரவேற்கும் உங்கள் நட்பின் உலகம் ¸.•♥´¨`♥•.¸¸.•♥´¨`♥•.¸¸.•♥´¨`♥•.¸¸.•♥¸.•♥´¨`♥•.¸¸.•♥´¨`♥•.¸¸.•♥´¨`♥•.
என்னைப் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை நீங்கள் என்னை உங்கள் உண்மையான நண்பனாக ஏற்று கொண்டால் நானும் உன்ன்மயனவனாக இருப்பேன்.
சந்தோஷத்தில் கைகுலுக்க மறந்தாலும் சோகத்தில் கண் துடைக்க
நிச்சயம் உன் அருகில் இருப்பேன், ஒரு நல்ல தோழனாக........

வெளிச்சம் வந்து வானம் விடிந்தாலும் !
மனதில் ஏனோ ஒரு வருத்தம் !
கனவுகள் யாவும் ஏன் கையில் இருந்தாளும்!
ஏன் எனக்கும் மட்டும் இந்த தடுமாற்றம்
வாழும் வாழ்கையில் ஒரு கேள்விகுறி !
பதில் தெரியாதா கேள்விகளில் !
மனம் தடுமாறும் நேரத்தில் !
இங்கே உன்னதனமான உன் நட்பு என்னும் பந்தத்தில்
நான் என்னை மறந்து கண்கள் மூடி கனவு காண !
என்ன வித்தை செய்தாய் நண்பனே !
நீஙகள் எனக்கு நண்பனாக கிடைக்க .......
```````````````````````````
¸.•♥´¨`♥•.¸¸.•♥´¨`♥•.¸¸.•♥´¨`♥•.¸¸.•♥
நட்பினிலே நட்பினிலே பிரிவு என்பது ஏதும் இல்லை..........
நட்பினிலே நட்பினிலே பிரிவு என்பது ஏதும் இல்லை..........
என் மனமும் உன் மனமும் பேச வார்த்தைகள் தேவை இல்லை
உள்ளுக்குள்ளே உள்ளுக்குள்ளே ஆயிரம் எண்ணங்கள் ஓடுதடா\ஓடுதடி
அத்தனையும் அத்தனையும் உன்னுடைய பார்வை தேடுகிறதே
எத்தனை நாள் எத்தனை நாள் இப்படி நானும் வாழ்த்திருப்பேன்
""நட்பே"" நீயும் இல்லை என்று சொன்னால் எந்த நிழலில் நான் ஓய்வெடுப்பேன்
¸.•♥´¨`♥•.¸¸.•♥´¨`♥•.¸¸.•♥´¨`♥•.¸¸.•♥
சிப்பியிலிருந்து கிடைப்பது முத்து....
பூவிலிருந்து கிடைப்பது தேன்...
அன்பிலிருந்து கிடைப்பது உறவு...
ஒழுக்கத்திலிருந்து கிடைப்பது கல்வி...
அதுபோல் பள்ளிக்கூட வாழ்கையிலிருந்து கிடைக்கும் அழியாத உறவே
"நட்பு"

செபா

----------------------- "நான் "----------------------------------
-------

'நான்' என்பது முன்னுமற்ற பின்னுமற்ற இடைநிலை என்று எண்ணி தனக்கு இருபுறமும் தொடர்ந்து வந்ததும் வருவதுமான சங்கிலிகளைத் துண்டித்துக்கொண்டு தன்மயமான 'நான்' மட்டுமே ஸ்திரப்படுத்த முயன்று, உன்னை (கடவுளை) தொழுதுகொண்டிருக்கும் மூடாத்மாக்களுக்குத்தான் உன்னைப்பற்றிய பிரமிப்பு உண்டாவது சாத்தியம்.....

இந்த நூற்றாண்டில் வாழும் 'நானா'கிய எனக்கு....வெகு சாதாரணமாய் இருக்கும் எத்தனையோ விசயங்கள் எனக்கு முந்தைய நூற்றாண்டுகளில் வாழ்ந்த 'நான்'களுக்கு பிரமிப்பாக தோன்றி அந்த மயக்கத்தில் உன் காலடியில் வீழ்ந்தனர் என்று அறிந்தவன்.......

மாலதி மணியன்

என்னிடம் இருந்த
ஒரு இதயத்தையும்
பறித்துக் கொண்டது காதல்!
எனக்காக
ஒரு இதயத்தையே
பரிசளித்தது நட்பு!

கஷ்டங்களில்
யோசித்தது காதல்!
யோசிக்காமல்
கைகொடுத்தது நட்பு!

துயரங்களை நோக்கி
இழுத்துச்சென்றது காதல்!
உயரங்ளை நோக்கி
அழைத்துச் சென்றது நட்பு!

கட்டுப்பாடுகளை
தளர்த்த முயற்சித்தது காதல்!
கடமைகளை
உணர்த்த முயற்சித்தது நட்பு!

என் இலட்சியங்களை
கனவாக்கியது காதல்!
என் கனவுகளை
இலட்சியமாக்கியது நட்பு!

காயம் தரும்
காதல் வேண்டாம்!
நன்மை தரும்
நட்பைக்கொடு இறைவா!!

mamani: jo:

சிரித்தால் சிரிப்பதற்கு
பலர் உண்டு ..
பொழுது போக்கவே
கூடி சிரிக்கவும்
பலர் உண்டு..

இன்பத்தை மட்டுமே
பகிர முடிந்தது அங்கு !!

இதயத்தை பகிர்ந்துகொள்ள
நீ மட்டும் தான்
என் அன்புத் தோழி!

சுயம் மறந்து
நேசிப்பவர் நலம் நாடிய
பல தருணங்களில்
ஆழமான நட்பு நம்முள் அரங்கேறியது !!

எதையும் இழக்கச் சம்மதிக்கும்
ஆழமான அன்பினால்
வேறூன்றியது அது !!!

எத்தனை எத்தனை
உறவுகள் வந்தாலும்
உள்ளம் திறந்து உண்மை வடித்து
உணர்வுகள் கொட்டி தோள் சாய்ந்திட
உனையே நாடும் என் மனம் !!!!!

வருடங்கள் பல கடந்து
சந்திக்கும் போதும்
சிறுதயக்கமும் இன்றி
உள்ளன்போடு உறவாடும்
அன்யோன்யம்
உன்னிடம் மட்டுமே !

சுகத்தைப் பகிர மறந்தாலும்
சோகத்தைப் பங்குபோடத் துடிக்கும்
என் உயிர்த் தோழி!

நெஞ்சில் நன்றி சுரக்க
கண்ணில் நீர் வடிய
கை கூப்புகிறேன் மனதில்...

உன் நட்பும்
உன் நட்பின் பாதிப்பும்
வாழ்நாள் முழுதும்
என்னோடு நடை போடும் !!!

ஆதிகேசன் (AADHI): எப்பொழுதும் பேசுவது உன் பணி
எப்பொழுது நாம் பேசுவோம் இனி !!!

சிந்திக்கும் உன்னை சிலரில் எனக்கு முதல் இடம்
சிலிர்க்க வைக்கும் என் மனதில் ஏன் பதித்தாய் தடம் !!!

கவிக்குயில் என கவிதை பாடி !!!
கணநேரத்தில் வந்துவிட்டாய் எனை நாடி !!
"மாலதி " உன்னை கண்டு !!!
தலை நிமிர செய்து விட்டாய் என்னை இன்று !!!

நாளும் நனைத்திடுவோம் நட்பு மழையில்
ஆனந்தம் கொண்டாடிடுவோம் ஆர்க்குட் அலையில் !!!

தயக்கம் கொண்ட என் இதயம்
"மாலதி " யால் இனி தாங்கும் எதையும் !!!

இனி உன்னை சந்திக்க சிந்திக்க ஒரு தோழன் !!!
ஆதிகேசன் (AADHI): நீ எனக்கு தோழியாக கிடைக்க
நான் ஏது தவம் செய்தேனோ?
கலகலவென நகைக்கும் வயதில்
சலனமில்லாமல் இவ்வளவு சோகமா?

உனக்குள் இருக்கும் சோகத்தை
எனக்குள் இன்றே புதைத்துவிட்டு
கள்ளமின்றிச் சிரித்திட
உல்லாச வானில் பறந்திடு

உன் இலட்சியங்களை நிறைவேற்ற
என்றும் உனக்கு துணையாவேன்
இன்றே விரைந்து புறப்படு
நன்றே நடக்கும் உன்வாழ்வில்

பழையனவற்றை மறந்திடு
புதியதை தேடி விரைந்திடு
சோகத்தை தூக்கி எறிந்திடு
தோழி என் தோளில் தலை சாய்த்திடு

ஆயிரம் உறவுகள் தோன்றியும்
அன்பில்லையே என சலிக்காதே
நட்பைவிட வேறேது இன்பம்
நானிருப்பேன் கலங்காதே


உங்களை சந்திக்க சிந்திக்க ஒருவன் !!!

அம்மா செல்லம் ~ARUL~

காதல் என்பது நேசிப்பது
திருமணம் என்பது யோசிப்பது
நட்பு என்பது சுவாசிப்பது
நேசிகமலும்
யோசிக்கலாம்
இருக்கலாம்
சுவசிகாமல் .......?!
அழகா இருந்தால் வருவேன் என்றது "காதல்"
பணம் இருந்தால் வருவேன் என்றது "சொந்தம்"
எதுவும் வேண்டாம்...............
நீ இருந்தால் போதும் நான் வருவேன் என்றது "நட்பு"
.......................................
நேசிக்கும் முன் யோசி.......
ஆனால் நேசித்த பின் யோசிக்காதே........
அது நீ நேசித்த இதயங்களை காயப்படுத்தும்.........
.......................................
இரண்டு மலர்கள் பேசிக்கொண்டன........
ஒரு செடியில்தனே ஒன்றாக மலர்ந்தோம்..........
உனக்கு மணவறை..........
எனக்கு ஏன் பினவரை.........
இன்று தலை குனிந்து
படிக்கும் படிப்பு -நாளை
தலை நிமிர்ந்து நிற்பதற்கே !!!
*****♥*****♥*****♥*****♥*****
forget the present but dont forget the past...........கல்விபெற பள்ளி சென்றேன்
கவிபெற தமிழை பயின்றேன்
நட்பைபெற உன்னிடம் வந்தேன்
ஓரளவாயினும் மேற்கூறிய இரண்டையும்
கற்றுள்ளேன்
ஆனால் உன்னுடைய நட்பை ஓரளவு
கற்க மேலும் 100 பிறவிகள் தேவைப்படும்
ஆதலால் நித்தம் உன் நண்பனாய்.
நட்பு எனது நாடி துடிப்பு ,,,,,,(இதற்கு முற்றுப்புள்ளிகள் கிடையாது)
சிப்பிய திறந்தால் முத்து என் இதயத்தை திறந்தால் நட்பு.........
நல்ல நண்பன் அமைவதல்லாம்
இறைவன் கொடுத்த
வரம்கடல்லைவிட நட்பு பெரிது' சமூகப் பக்கத்தைப் பார்க்க, இங்கே செல்லுங்கள்: http://www.orkut.co.in/Community.aspx?cmm=62933057
http://arulmsr.blogspot.com/
எதையும் உண்மையாக பேசுபவன் மட்டுமே நண்பன் நண்பா வாருங்கள் நம் நண்பர் குடும்பத்தில் இணைவோம் அழகான தோழிகள் அன்பான நண்பர்கள் வாழும் அன்பான பூமி இணைந்து சரித்திரம் படைப்போம் இவன் உங்கள் நண்பன் அருள் -ரா

தேன்மொழி இளம்வழுதி

என் தவத்தின் பயனாய் உன் வரவு , என் சாபத்தின் விளைவாய் உன் பிரிவு !!!!!!! ----> என் உயிர் தோழியே !!!!

!..வெங்கடேஷ்..!! "வொர்கிங் இன் டைடல் பார்க்"

http://www.nayanthara.sifymax.com/

http://www.behindwoods.com/nayanthara/

நாங்க அஞ்சு பேரு எங்களுக்கு காமெடி மட்டும் தான் பண்ண தெரியும் ....... OFFICE வேலைல ஹ்ம்ம்ம்ம்ம்ம்....
எங்கள OFFICE ல இம்சைகள் நு திட்டுவாங்க......

நாங்க அஞ்சு பேரும்......!!!!

எங்களில் முதலில்....!!!!!!!!!!!

1. உம்பெகா (பாலாஜி....நு சொல்லுவாங்க)........ இவன பெத்ததுக்கு அவங்க வீட்ல எல்லாருமே லக்கி....பேசியே எல்லாரையும் தூங்க வெச்ருவான்.......!!!!!!!!!!!!

இவர பத்தி சொல்லனும்னா இவரு ஒரு..... நடமாடும் மின்விசிறி (FAN)...... !!!!!!!!!!

2. பாத்து செய் மச்சி.... (சுரேந்தர் ....நு அப்ப அப்ப சொல்லுவாங்க) இவனால இவங்க அப்பா கடன் பட்டது தான் மிச்சம்... !!!!!!!!
பாவம் அந்த மனிஷன்..இவனுக்கு சோறு போட்டு கட்டுபடி ஆகம, நீ ரூம் எடுத்து தங்கி சமட்சி சாப்டு பா நு சொல்லிட்டாரு....!!!!!!!!!!!!!!!

3. ஜிகு ஜிகு மச்சான் (அபிஷேக் ....)
தி கிரேட் ரோமியோ நு நெனப்பு.... மொபைல் PHONE எடுதாருணா இவர கண்ட்ரோல் பண்ணவே முடியாது.....
நாங்க "ராமராஜன் FAN" ஆகா காரணமே எங்க கூட இருக்கிற இந்த ராமராஜன் தான். ஆனா Dressingla இவனுக்கு அந்த ராமராஜனே எவ்ளோவோ தேவலாம் !!!!!!!!!!!!

4. CHAMPION OF OUR TEAM (ராதாகிருஷ்ணன்....மச்சி We Miss U a Lot Da) கலக்க போவது யார் CHAMPION மாதிரி இவன்தான் எங்களோட CHAMPION ... இவன் கூட இருந்தானா பசங்க பொண்ணுங்கள .... SITE அடிக்க மாட்டாங்க ..அவனோட காமெடி கேட்டு பொண்ணுங்கள கலாய்பானுங்க..!!!!!!!!!!


5. LAST BUT NOT LEAST... (...VENKATESH WORKING IN TIDEL PARK.."TIGHT ஆவேன் ஆனா பார்க்ல படுக்க மாட்டேன், பசங்க கிட்ட திட்டு வாங்குவேன்...எனக்கு இன்னொரு பேரும் இருக்கு......அத OPEN ah சொல்ல கூடாது........!!!!!!! PUBLIC PUBLIC........ சொல்லலநா என்ன அடிப்பானுங்க ..... "

இன்னும் சொல்ல போன நான் ஒரு Part-Time கவிஞ்சன்...!!! Over expect பண்ணாதிங்க.....தினத்தந்தி, தினகரன், குமுதம், குங்குமம், மாலைமலர், etc. ல.... இருந்து திருடி கொஞ்சம் என்னோட சொந்த Bit add பண்ணுவேன் ...


ராஜாதி ராஜ...!!!!!!!!!!!!!
ராஜ கம்பீர....!!!!!!!!!!!!!!
ராஜ குலோத்துங்க.....!!!!
ராஜ குலதிலக...!!!!!!!!!!!
ராஜ மார்த்தாண்ட......!!!!!
பாயும் புலி .....!!!!!!!!!!!!!!!!!
பறக்கும் கில்லி.......!!!!!!!!!!!
சைதை வெங்கட்......("ஹரிச்சந்திரன்")....

அப்ப அப்ப மக்களுக்காக கொஞ்சம் பொய்....சொல்வேன்....!!!!!



"அரசியல்வாதி நாளே தியாகிகல்தானே....!!!!!!!!!

மொதல்ல நோட்ஸ் எடுப்பாங்க......

அப்புறம் செல வைப்பாங்க.......
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா....!!!!!!!!!!


I AM REALLY GREAT TO GET THOSE FRIENDS......IN MY LIFE....... MY SORROWNESS, HAPPINESS, JOYFULLNESS, (KASA MUSA ) EACH AND EVERY MOVEMENT I AM MISSING THEM A LOT.........MY MACHIS ARE GREATTTTTTTTT


1.. BALAJI MACHI, 2. SURENDAR MACHI.... 3., ABISHEK DEAR....4. RADHAKRISHNAN CHELLAM.... 5.. VENKATESH (ITS ME ) ..............

●๋•அடலேறு๋•●๋ Satheesh Charles

என்னுடைய தமிழ் தளம்
http://adaleru.wordpress.com

உரையாட : infosat06@gmail.com

தீபாவளி காதல் இடுகை படிக்க இங்கே செல்லவும்

http://adaleru.wordpress.com/2009/10/13/diwali-love/

சமீபத்திய இடுகை ( எதிர் கூர்லறம் ) படிக்க இங்கே செல்லவும்

http://adaleru.wordpress.com/2009/09/30/opposite-action/ http://adaleru.wordpress.com/2009/09/18/last-page-scribblings-6/

அண்மையில் அடலேறு தளத்தில் பதியப்பட்ட கவிதை படிக்க இங்கே செல்லவும்
http://adaleru.wordpress.com/2009/08/11/last-page-scribblings-5/

நட்பாகி போனேன் கவிதை படிக்க இங்கே செல்லவும் http://adaleru.wordpress.com/2009/04/16/natpagi-ponen/


உலகில் எங்கெல்லாம் அநீதி தலையெடுக்கும் போது
அதை கண்டு நீ வெகுண்டு எழுவாயானால்
நீயும் நானும் நண்பர்கள்
-சேகுவேரா

இராதா பிரியா "தமிழ்த்தாயின் செல்ல மகள்!"

http://pamaran.wordpress.com/
செயல்களாலேயே அன்பை, கோபத்தை, வருத்தத்தை வெளிப்படுத்த முடியாதபொழுதுதானே வார்த்தைகள் தேவைப்படுகின்றன.எந்தப் பொருளும் இழக்கப்படும் வரை உணரப்படுவதில்லை. இழந்துவிடுவோம் எனும் நிலையில்தான் உயிர்கூட பிரம்மாண்டமானதாய் உருவெடுத்து நிற்கிறது.வளரும் நாடுகள் வளர்ந்த நாடாகவே மாற முடியாத அளவிற்குச் சுற்றுப் புறச் சூழல் கேட்டுப் போகும் பொழுதுதான் வளர்ந்த நாடுகளுக்கு ஆதாயம்.
சாஸ்திரங்களை படித்துக் கொண்டு வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்காதே தோழமையே!... நீ செய்ய வேண்டிய சாதனைகள் உனக்காக உன் பாதையில் காத்து கொண்டிருக்கின்றன நீ புதிதாய் ஒரு சரித்திரம் படைக்க!".... எழுந்து வா..,எழுச்சி கொண்டு வா புரட்சி செய்ய வா புதுமைகள் படைப்போம் வா!...... என்று தணியும் இந்தச் சுத்திர தாகம்?
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?
என்றெம தன்னகை விலங்குகள் போகும்?
என்றெம தின்னல்கள்! தீர்ந்துபொய் யாகும்?

தொண்டு செய்யும் அடிமை!-உனக்குச் சுதந்திர நினைவோடா?
பண்டு கண்ட துண்டோ?-அதற்குப் பாத்திர மாவாயோ?
ஜாதிச் சண்டை போச்சோ?-உங்கள் சமயச் சண்டை போச்சோ?
நீதிசொல்ல வந்தாய்!-கண்முன் நிற்கொணாதுபோடா!
அச்சம் நீங்கினாயோ? அடிமை! ஆண்மை தாங்கினாயோ?
பிச்சை வாங்கிப் பிழைக்கும்-ஆசை பேணுத லொழித்தாயோ?
கப்பலேருவாயோ-அடிமை! கடலைத் தாண்டுவாயோ?
குப்பை விரும்பும் நாய்க்கே! அடிமை!
கொற்றத் தவிசுமுண்டோ?
ஒற்றுமை பயின் றாயோ? அடிமை!
உடம்பில் வலிமை உண்டோ?
வெற்றுரை பேசாதே!-அடிமை!
வீரியம் அறிவாயோ? சேர்ந்து வாழு வீரோ?-உங்கள்
சிறுமைக் குணங்கள் போச்சோ?
சோர்ந்து வீழ்தல் போச்சோ?-உங்கள்
சோம்பரைத் துடைத்தீரோ
வெள்ளை நிறத்தைக் கண்டால்-பதறி
வெருவலை ஒழித்தாயோ?
உள்ள துசொல்வேன் கேள் சுதந்திரம்
உனக்கில்லை மறந்திடடா!
நாடு காப்ப தற்கே-உனக்கு
ஞானம் சிறிதுமுண்டோ?
வீடு காக்கப் போடா!-அடிமை!
வேலை செய்யப்போடா!
சேனை நடத்து வாயோ!-தொழும்புகள்
செய்திட விரும்புவாயோ?
ஈனமான தொழிலே உங்களுக்கு
இசைவதாகும் போடா!
இதை படிக்கும் சூடு சுரணை உள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் உறைக்கும், தமிழன் எப்படி அடிமையாய் இருக்கிறான் என்பதையும் அறிய வைக்கும் பாரதியாரின் பாடல் இது!... அடிமை விளங்கினை உடைத்தெறிவோம்.., அறிவோடும் ஒற்றுமையோடும் நம்மினம் காப்போம் தோழர்களே!... அடிமை வாழ்கையும் அறியாமை வாழ்கையும் போதும் உடன்பிறப்பே.., புரட்சி செய்து சுதந்திரம் பெற்று புது வாழ்வு வாழ்வோம் வா!.... சாது மிரண்டால் காடு கொள்ளாது! தமிழர்கள் எழுந்தால் இந்த தரணி கொள்ளாது! தமிழ் நாட்டுப் பெருங்கடலில் இருந்து தமிழர்கள் எனும் புயல் புறப்பட்டால்.. இந்தியாவும் இருக்காது எங்கள் காலடியில் தொங்கும் இலங்கையும் இருக்காது அடியோடு அழித்து விடுவோம்!
தமிழர்களாகிய எங்கள் மீது ஏறி மிதித்துக் கொண்டிருக்கும் அந்நியச் செந்நாய்களே!.. சிரியுங்கள் கடைசியாக சிரித்துக் கொள்ளுங்கள்..ஏனென்றால் நாங்கள் எழும்போது உங்கள் உடலை இரண்டாகப் பிளந்துக் கொண்டு எழுவோம்..சிரித்த உங்கள் வாய்கள் கிழிக்கப்படும்!...
தமிழர்கள் நாங்கள் கொட்டக் கொட்ட குனிபவர்கள் அல்ல.. குனிந்து வீரமூட்டும் எங்கள் தாய் மண்ணை எடுத்து நெற்றியில் திலகமிட்டு, எதிரிகளின் குடலை உருவி வெற்றி மாலையாக சூடுபவர்கள்!...
வீரத்திற்கு இலக்கணம் எழுதிய எங்களையே வீழ்த்த முடியுமா முட்டாள்களே!.. வீழ்த்துவது எப்படி என்று வ்யூகம் அமைத்த எங்கள் மீதே சதி வேலையா சண்டாலர்களே!...
அடிமைகள் அல்ல தமிழர்கள்!.. அடங்கா சினம் கொண்டு கொண்டு எழுந்து தங்கள் எதிரிகளை அடியோடு அழிப்பவர்கள்!

--பாசப் பறவைகள்- ***பலவிதம் ***

******ωєℓ¢σмє****



╬♥╬╬♥╬╬♥╬╬♥╬╬♥╬╬♥╬╬[♥╬╬♥╬




♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
----нєy gυyz
<\
_/\_

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


<º))))><.•´¯`•. ι αм αℓωαуѕ ¢σσℓ. ¸.•´¯`•.¸><((((º>

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

<\
_/\_

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥



▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

–––•(-• Thαπkš FΘг Višitiπg мŷ ρгΘƒilε –•-)•––––


▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

<\
_/\_

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

Be in Touch Forever

()““*()
( “o“ ) “) OnE MinUte
(“)_(“)

()““*()
( “o“ ) “) OnE hOuR
(“)_(“)

()““*()
( “o“ ) “) OnE DaY
(“)_(“)

()““*()
( “o“ ) “) OnE WeEk
(“)_(“)

()““*()
( “o“ ) “) OnE mOntH
(“)_(“)

()““*()
( “o“ ) “) OnE YeAr
(“)_(“)

()““*() No MatTeR HoW LoNg,
( “o“ ) “) I“ll tReaSuRe ThE TiMeS We
(“)_(“) BeCaMe FreNdz ...

()““*() HopE We ReMaiN In tOuCh
( “o“ ) “) Forever ever ever ...
(“)_(“)

red]╬♥╬╬♥╬╬♥╬╬♥╬╬♥╬╬♥╬╬[♥╬╬♥╬



♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

<\
_/\_

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥




Personal Profile

иαмє......... : Anish
αgє...............:27yrs
date of Brth :June 21
нσмєтσwи...: тαмιℓηα∂υ
hєighт : 5’5”
þlคcє σf ßiятh :Trichy
мσтhєя тσиguє :тคмil
lคиguคgєร kиσwи : тคмil, єиgliรh



╬♥╬╬♥╬╬♥╬╬♥╬╬♥╬╬♥╬╬[♥╬╬♥╬


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

<\
_/\_

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

мy fคvσuяiтєz
cσlσuя: Violet
คcтσя:Rajini
ραѕѕιση:мυѕιc and watching TV , Playing Games



♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

<\
_/\_

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


Friendship is you!
Friendship
. . . is you.
. . . is love.
. . . is shared.
. . . is forgiving.
. . . is understanding.
. . . is shared secrets.
. . . is shared laughter.
. . . can be angry at times.
. . . is dependable and true.
. . . is meant to be savored like fine wine.
. . . is not perfect, much like we are not perfect.
. . . is meant to be gulped like lemonade on a hot summer day.
. . . is always there, through times of trial, happy times and hard times.
. . . just happens, but once discovered, needs to be tended like a beautiful garden.
. . . is a road to be traveled slowly, remembering the sights and sounds.
. . . is strength when you are too weak to notice its there.
. . . reaches into your heart and grabs a firm hold.
. . . is a refreshing rain on a hot day.
. . . is relaxed and comfortable.
. . . is a shoulder to lean on.
. . . is an ear to whine to.
. . . gets better with age.
. . . is shared tears.
. . . is shared joy.
. . . is shared.
. . . is love.
. . . is U




♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

<\
_/\_

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥





,.-~*´¨¯¨`*•~-.¸-(_ End_)-,.-~*´¨¯¨`*•~-.¸

ஆதவன் $$$$$ $$$$$$$

உன்னிடம்
பேசும்போதெல்லாம்
பார்க்கவேண்டும் என்று
தவறாமல் தோன்றும்.
ஆனால்
பார்க்கும் போதெல்லாம்
பேசத் தோன்றுவதில்லை.

உன்னை
அதிகமாய் நேசிக்க
நேரம் தேடுவதனாலேயே
என்னை
நேசிப்பதை
நிறுத்தி விட்டேன்.

மோகம்,
உடலின் செல்கள்
உறங்கும் வரை.
காதல்
உயிர்ப் பறவை
விழித்திருக்கும் வரை.


துளைகள் இல்லா
புல்லாங்குழல்
போல,
காதல் இல்லா வாழ்க்கை !
காற்று இல்லா
புல்லாங்குழலாய்
நீ
இல்லாத நான்

எது இல்லாமலும்
என்னால்
இருக்க இயலும்,
நீ இருந்தால்

மலரும் போதும்
உதிரும் போதும்
சத்தம் போடுவதில்லை
ரோஜாப் பூக்கள்,
நம்
காதலைப் போல.

அடித்துக் கொண்டே இருக்கிறது
என் காதல் காற்று
நீயோ
அதன் முதல் முனை எங்கேயென்று
வினா தொடுக்கிறாய்.
எங்கே தேடுவேன்
வட்டத்தின் மூலையை ?

காதலுக்கு கண்ணில்லை
என்பதெல்லாம் பொய்,
உன்
கண்ணுக்குள் தான்
காதலில்லை
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~
மாமு உன்கிட்டதான் ஒண்ணுமே இல்ல வெறும்பய நீ எதுக்கு பொலம்புற ....

(நான் படித்ததில் பிடித்து )

உங்கள் நண்பன்... kannan

*****கல்லூரிவாழ்க்ைக******
பிறந்த குழந்ைதைய அரவைணக்கும் தாையப்போல
நம்மை அரவைணத்த நம் கல்லூரி விடுதி


முதலாண்டில் கழுகாய் நம்ைம கொத்திச்
செல்ல முயன்ற சீனியர் மாணவர்கள்

நம்ைம Albert Einstein-களாக மாற்ற
முயன்ற புரொபஸர்கள்


நம்ைம கட்டுக்கோப்புடன் நடத்த முயன்று
வெற்றிக்கனியை பறிக்காத விடுதி Warden


பரீட்ைசக்கு முந்ைதய இரவு நாம் நடத்திய
பட்டிமன்றங்கள் மற்றும் அரடை்ட அரங்கங்கள்


வெட்டிக் கைதகளும் இைணய தளமுமாக
நாம் கழித்த அர்த்தமற்ற சிவராத்திரிகள்


நல்ல உணவிற்காக பொறுத்து பின்
போராடி மாற்றிய உணவு விடுதி


சனி ஞாயிறுகளில் பல்கூட துலக்காமல்
நாம் உண்ணும் 'மயக்க' பிரியாணி


கூட்டம் கூட்டமாக ஒரே அைறயில் நாம்
கண்டுகளித்த வண்ணமயமான திைரப்படங்கள்


ஒராண்டு முடிந்ததும் பழிவாங்கும் படலமாக
நம் Juniors-ஐ நாம் படுத்திய பாடு
பொறுப்பற்று சுற்றிய நம்ைம ஆறு மாதத்திற்கு
ஒருமுறை நெறிப்படுத்திய Semester Exam


வீட்டிற்கு செல்ல அங்கங்கே நாம்
ஒதுக்கும் 'சின்னஞ்சிறு' விடுமுைறகள்


உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் Cellphone-ல்
விடிய விடிய நாம் 'வறுத்த' கடைலகள்


எப்போதுமே கைடசி நாளில் நாம்
சமர்ப்பிக்கும் Recordகள், Assignment-கள்


நிலஅதிர்ச்சியாலும் சுனாமியாலும்கூட அைசக்க முடியாத
நம்ைம அதிர வைத்த Ms University Result-கள்
நாமிட்ட தேைவயற்ற சச்சரவுகளும் அதில்
இருந்து கற்ற கசப்பான பாடங்கள்


விடுதியின் குறுகிய நைடபாைதயில் நாம்
விைளயாடிய Cricket மற்றும் Football


நள்ளிரவில் ஆள் அரவமில்லாத சாைலகளில்
காற்று வாங்க நாம் சென்ற Walking-கள்


தினந்தோறும் வகுப்பிற்கு லேட்டாக சென்று
நாம் 'maintain' செய்த Punctuality


ஆயிரம் அடித்துக் கொண்டாலும் கைடசியில்
ஒற்றுைமயாக நாம் நடத்திய Symposium


Placement-ல் நம் வேைலக்கு வேட்டு ைவத்த/ைவக்க
முயன்ற நாம் ைவத்த "கப்பு"கள்


கஜினி முகமது போல வேைலக்காக விடாமுயற்சியுடன்
நாம் ஏறி இறங்கிய Company-கள்


மூன்றே மாதங்களில் முடிக்க வேகவேகமாய்
நாம் செய்து 'வாங்கிய' Project-கள்


போருக்கு வியூகம் அைமப்பது போல்
அைமத்து நாம் அடித்த Mass Bunk-கள்


உலகம் சுற்றும் வாலிபர்களாக நாம்
சுற்றிக் களித்த வட இந்திய சுற்றுலா


வகுப்புக்கு மட்டம் போட தினமும் Technique-ஆக
நாம் கொண்டாடிய Birthday / Batchday-கள்


ைவத்திருக்கும் எல்லா Equipment-யும்
பொசுக்கி நாம் செய்த Lab வகுப்புகள்


Arrear உறுதியானாலும் தன்னம்பிகை்கயோடு
நாம் நிரப்பும் 44 பக்க விைடத்தாள் என்று எல்லாமே
இப்போது திரும்பி பார்த்தால் "குறும்பு" செய்தது
போன்ற உணர்ைவ ஏற்படுத்தினாலும் இைவயெல்லாம்
தான் எனக்கு "வாழ்க்ைகைய" சொல்லி கொடுத்தது

°ღ•தமிழன்•ღ° ☺

...தமிழன்...



சந்தோசமாக இருக்கும்

இடத்தில் வாழ நினைப்பதை விட.......

நீ இருக்கும் இடத்தை

சந்தோசமாக வைத்துக்கொள்.......

உன் வாழ்வு சிறப்பாக இருக்கும்

உங்கள் அன்பு நண்பன்

ஆ.அருள் குமார் ....

மன்னை முத்துக்குமார்.

about me:

http://oomaiyinkural.blogspot.com/
---------------------------------------------
http://smuthukumaran.wordpress.com/
-------------------------------------------
பறிபோன உரிமைகளை, பிச்சையாகப் பெற முடியாது. தீர்மானங்கள் மூலமோ, மன்றாடுவதன் மூலமோ, நியாயங்கள் பிறக்காது. ஆடுகளைத்தான் கோயில்கள் முன் வெட்டுகிறார்களே ஒழிய, சிங்கங்களை அல்ல!
-- டாக்டர் அம்பேத்கர்
---------------------------------------------
"உண்மையை உண்மையாகவும்
உண்மையல்லாதவற்றை உண்மை
அல்லாதவையாகவும் தெரிந்து கொள்
''
---- புத்தர்
---------------------------------------------
உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தை கண்டு உங்கள் உள்ளம் கொதித்தால் நாம் நண்பர்களே --- -சேகுவேரா
--------------------------------------------
நீ சொல்வதை நான் ஏற்கவில்லை,
ஆனால் அதை சொல்வதற்கான
உன் உரிமையை காக்க
என் உயிரையும் கொடுப்பேன்

--- வால்டேர்
-------------------------------------------
சில சமயங்களில் முடிவுகளைவிட முயற்சிகள் அழகானவை. பலன்களைவிட செயல்கள் மேன்மையானவை;.
--------------------------------------------
நாம் முன்னோக்கி பார்க்கவேண்டும் என்பதற்காகத்தான் கண்கள் முதுகு பக்கம் இல்லை.
---------------------------------------------
எவன் ஒருவன் தன் உரிமைகளை எப்பொழுதும் தற்காத்து கொள்ள தயாராக இருக்கிறானோ,
யார் ஒருவன் பொது விமர்சனத்துக்கு அச்சப்படாமல் இருக்கிறானோ,அடுத்தவன் கைப்பாவையாக மாறாமல் போதிய சிந்தனையும் சுய மரியாதையும் பெற்று இருக்கிறானோ -அவனே
சுதந்திரமான மனிதன் என்பேன்
.
---புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர்.
---------------------------------------------
நாம் எந்த ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை
நமது எதிரிகள் தீர்மானிக்கிறார்கள்

----மாவோ
---------------------------------------------
பாதையை தேடாதே, உருவாக்கு--லெனின்
---------------------------------------------
கவிதை உலகம்.
http://www.orkut.co.in/Main#Community.aspx?cmm=90238197
--------------------------------------------
தந்தை பெரியார்
http://www.orkut.co.in/Main#Community.aspx?cmm=60187514

எங்கிருந்தாலும் ஈழத்தை பார்த்தபடி....

குறள் இனையத்தளத்தொலைக்காட்சியின் படைப்பான குறள் இணையத்தள வானொலி இப்பொழுது ஒலிப்பாகிறது http://www.kuraltv.com/radio/

சு.குமரேசன் (இளங்கலை வணிகவியல்

இளைய தலைமுறையே! மக்கள் களம் புகு, தொண்டு செய்! அரசியல் களம் புகு புரட்சி செய்! பொதுநல உணர்வு கொள்!

உலவு.காம்

துணிந்து நில்,தொடர்ந்து செல்.தோல்வி கிடையாது தம்பி. உள்ளதை சொல், நல்லதை செய் தெய்வம் இருப்பதை நம்பி.

கை.அறிவழகன் கைவல்யம்

நான் என்பது, எனது சமூகம், என் மொழி, என் மக்கள், ஒரு காலிப் பாத்திரமாய் பிறந்த என்னை, தன் நிறங்களால் முழுமைப் படுத்திக் கொண்டிருக்கும் என் நாடும் மக்களும் தான் என்னுடைய அடையாளம், என்னுடைய நிறைகள் முழுமைக்கும், தமிழும், தமிழினமும் காரணிகள், என்னுடைய குறைகள் முழுமைக்கும் நான் மட்டுமே காரணி.

புதன், 14 அக்டோபர், 2009

விடியலுக்காக காத்திருப்பவள்....

மானுடமாம் மானுடம் ! மதிகெட்ட இம்மானுடத்தில்..
ஒரு இலட்சம் தமிழனை இழந்தபின்னும்
இன்னமும் காசுக்காக முண்டியடித்தித்துக் காட்டிக்கொடுக்கும் மானெங்கெட்ட எட்டப்பார்கள் வாழும் இவ்வுலகில் விடிந்தேத்தீரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் மூச்சிருக்கும் வரையில் தமிழுக்காகவே வாழ நினைக்கும் ஒரு தமிழச்சி

செவ்வாய், 13 அக்டோபர், 2009

ღ• தமிழன்•ღ°

...தமிழன்...



சந்தோசமாகா இருக்கும்

இடத்தில் வாழ நினைப்பதை விட.......

நீ இருக்கும் இடத்தை

சந்தோசமாக வைத்துக்கொள்.......

உன் வாழ்வு சிறப்பாக இருக்கும் ......

**********

"தோல்வி உன்னைத் தோற்க்கடிக்கும் முன்
தோல்வியை நீ தோற்க்கடித்து விடு"
-விவேகனந்தர்.



கீதாசாரம்

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,
அதுவும் நன்றாகவே நடக்கும்
உன்னுடையதை எதை நீ இழந்தாய்?
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைதிருந்தாய், அது வீணாவதற்கு ?
எதை நீ எடுத்து கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.

"இதுவே உலக நியதியும், எனது படைப்பின் சாராம்சமாகும்"

திங்கள், 12 அக்டோபர், 2009

கல்லறை தூக்கமும் சுகம்- உன் நினைவுகள் தாலாட்ட

என்னை பற்றி சொல்ல எனக்கே ஒரு வித அருவறுப்பை தருகிறது... உங்களை போல் நானும் ஒரு சராசரி மனிதன் தான்...

முதல் பக்கம் :
புதுவையில் மிக பிரபலமான பள்ளியில் 94% விழுக்காட்டில் தேர்ச்சி பெற்றவன்...

வாழ்வில் தோற்கப்போவது தெரியாமல், ஒரு இறுமாப்பில் கல்லூரி மாணவனாய்...
பெண் சகவாசமே இல்லாமல் கருப்பு வெள்ளை பட்டாம்பூச்சியாய் சுற்றி திரிந்தவன்... அதுவும் என் வசந்த காலம்... நண்பர்கள் படை சூழ தனி ராஜ்ஜியமே உருவானதாய் மிதப்பில் திரிந்த காலமது....

கரிய மேகங்களை கிழித்துக்கொண்டு பீறிட்டு வரும் மின்னல் போல... இரண்டாமாண்டு ரம்மியமாய் வந்தவள் என் தோழி...

முதன்முதலாய்
மென்மையாய் ஒரு நட்பு... என் மெல்லின நாயகியோடு...

ஆர்ப்பரிப்பாய் இருக்கும் என் நட்புலகில் ஒரு மயிலிறகாய் அவள்...

என்னை கொஞ்சம் கொஞ்சமாய் ஆட்சி செய்ய தொடங்கியவள்!
நட்பாட்சிக்கு புது விதிகளை வகுத்தவள்..

அவள் அன்பின் பாதிப்பில் அடிபணிந்தன என் குடிகாரத்தனமும் , முரட்டுத்தனமும்.....

மெல்லிய பூவுக்கு காவல்காரனாய் நான்... பறித்திடவும் , பருகிடவும் வந்த வண்டுகளிடம் சிக்கி சின்னாபின்னமாய் போனேன்... என் உள்ளங்கை உலகத்தில் இன்னும் பூ... தன வாசம் மாறாமல் மனம் வீசிக்கொண்டு இருப்பது... எனக்கு நானே ஆறுதல் படுத்திக்கொள்வதாய் உள்ளது....

வீசும் வரை காற்று...
சுடும் வரை நெருப்பு...
காதல் வருகின்ற வரை நட்பு...

காதலுக்கு ஆசைப்பட்டு அவள் சென்றதில் தவறில்லை... ஆசைப்பட்டதை அடைந்திட அவள் தேர்ந்தெடுத்த முறையில் மடிந்து போனவன் தான் நான்....

பிரிவென்ற ஒன்று எங்களிடையில் வந்து மூன்றாண்டு ஆகப்போகிறது...
இன்று அவள் நினைவாய் இருப்பது...
அவள் நினைவுகளும்... என் கையில் சிகரெட் ஏற்படுத்திய தழும்புகள் மட்டும் தான்....

அவள் அன்புக்கும் நட்புக்கும் சொந்தக்காரனாய் இருந்த நான்...
இன்று பீருக்கும் , பிராந்திக்கும் சொந்தம் !!!


இனி
நான் எண்ணப்போகும்
வாழ்நாட்களில்
உன் நினைவுகளும்
என் வேதனைகளும்
தீர்ந்துவிடும் நிலை வந்தால்
ஒரு பாட்டில் பீரும்,
ஒரே ஒரு சிகரெட்டும்
இந்த பிரபஞ்சத்தில்
மிச்சம் இருக்கட்டும்!

ஒவ்வொரு விஷயத்திலும் ஒடுக்கப்பட்டவனாய், வெறுக்கப்பட்டவனாய், ஒதுக்கப்பட்டவனாய்....

கை நிறைய சம்பளம் கொடுத்த பணி விடுத்து , ஒரு குடிகாரனை விட கேவலமானவனாய் என் நினைவுகளை
பிரேத பரிசோதனை செய்தபடி
எனதறையில் நான் !

என்னை விடுவித்துக்கொள்ள செய்யாத முயற்சிகள் இல்லை.. பலன் கிடைக்காமல்.... நாதாரித்தனமாய் ஊர் சுற்றிக்கொண்டு...

கடைசி பக்கம்:
தினம் முடிகின்ற இரவு... ஒரு விடியலுக்காக தான்.... என்னில் எதிர்மறையாய்... இரவு விடிவதே இல்லை....

ஒரு விடியலுக்காய் காத்துகிடக்கும்...
உங்கள் அன்பன்....

கவிதைக்காரன் டைரி

உன் கரங்களுக்கு கோடி முத்தங்கள்..
தயவு செய்து நீ ஒருபோதும் உன் கரங்களை உதறிவிடாதே....
தோள்கொடுத்த உன் நட்பிற்கு நன்றிகள் கோடி
நட்பே உன் கற்பை நான் என்றும் அழியாது காப்பேன்
**********************************************
நட்பிழைச் சுற்றிக் கொண்ட..
சுண்டு விரல் ரேகைகளில்..
படிந்து விட்ட கோடுகளின்..
சிவந்த வரிகளில்..
படுத்தபடி..
யோசித்துக் கொண்டிருக்கிறது..
எழுதாத
கவிதை ஒன்று..!

siva srinivasan

நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும்,மனதுக்கும் துன்பம் தரமாட்டேன். துன்பபடும் உயிர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன்

!கவியழகன்™ !கயமுகமறியான்™

**எதுவாவேன்?**

அறியேன் அறியேன் யானறியேன்
ஆண்டவன் ஏன்படைத்தானென்று யானறியேன்
இனிய உலகமிதில் – ஏனோ?…
ஈசன் என்னை படைத்ததேனோ?…
உழலும் வாழ்க்கைக்கடல் கடந்திடவோ!…
ஊர்போற்ற பேர்பெற்று வாழ்ந்திடவோ!…
எண்ணற்ற உலகமக்கள் – அதில்
ஏற்றம் பெற்று தெரிவேனோ?…
ஐம்பொறி ஆசை துறப்பேனோ?…
ஒற்றுமை எங்கும் வளர்ப்பேனோ?…
ஓர் உலகம் செய்வேனோ?…
ஔதசியம்போல் உலகிற்கு பயன்தருவேனோ?…
எஃகெனமாறி உலகை வெல்வேனோ?!…

ஃஃஃ

**நட்பு**

அன்பான என் தோழீ
ஆண்டவன்தான் கொடுத்தான் வாழீ
இன்முகம் காட்டினாய் கவியில்
ஈடில்லை நட்பின் உறவில்
உள்ளத்தில் குன்றாய் நின்றாய்
ஊருக்கு சொல்வேன் நன்றாய்
எதுவரை நட்பின் பாலம்
ஏதுமில்லை வானத்தில் எல்லை
ஐயமோ சிலநேரம் தொல்லை
ஒற்றுமைதான் எந்நாளும் திண்மை
ஓயாமல் செய்வோம் நன்மை
ஔவையாய் உயர்வாய் கவியில்
ஃபோல் தெரிவாய் தனியாய்.

ஃஃஃ

**தமிழ்ப்பெண்**

அழகான தேவதை அவள்
ஆண்டவனின் தனிப் படைப்பவள்
இன்முகமோ அவள் முகவரி
ஈடில்லா அழகோ வெகுமதி
உலகே வியக்கும் மெல்லிடை
ஊமை விழிகளோ வில்
எவர்தான் விரும்பார் சொல்
ஏமாற்றம் தான் விரும்பியோற்கு
ஐரிஸ் நிறமோ கண்
ஒரு தலையாய் காதலித்தோர்
ஓடாமல் ஓடுகின்றார் காண்
ஔரவம் தான் அவள்சொல்
அஃதேகாண் அவள் தமிழ்ப்பெண்.

ஃஃஃ

**மனைவி**

அவள் பிறப்பு வேறிடம்
ஆசைகளும் விருப்பங்களும் வேறுவேறு
இனிய காதலில் மலர்ந்தாள்
ஈடில்லா இல்லறத்தில் கலந்தாள்
உள்ளத்தை என்னிடம் கொடுத்தாள்
ஊர்போற்ற நல்லபெயர் எடுத்தாள்
என்விருப்பம் தனதாக ஏற்றாள்
ஏற்றம்பெற வழிகள்பல உரைத்தாள்
ஐஸ்வரியமாய் என்னில் நிறைந்தாள்
ஒவ்வொருநாளும் காதலை வளர்த்தாள்
ஓய்வின்றி குடும்பத்திற்காக உழைத்தாள்
ஔவியம் பேசல் தவிர்த்தாள்
இஃதே இல்லாள் அறமென்றுரைத்தாள்.

ஃஃஃ

**மக்கட்பேறு**

அன்பாய் குழந்தைகள் இரண்டு வேண்டும்
ஆசைதீர கொஞ்சி மகிழ்ந்திடல் வேண்டும்
இன்பம் பெற்றே வாழ்ந்திடல் வேண்டும்
ஈடுஇணை வேரில்லையென்று தெளிந்திடல் வேண்டும்
உலகுக்கு நல்மனிதராய் கொடுத்திட வேண்டும்
ஊர்போற்ற நல்லவராய் வளர்த்திட வேண்டும்
எட்டுத்திக்கும் அறியச் செய்திட வேண்டும்
ஏமாற்றம் தவிர்க்க பழக்கிட வேண்டும்
ஐயமின்றி செய்வன செய்திடல் வேண்டும்
ஒற்றுமை பேண கற்பித்திட வேண்டும்
ஓய்வின்றி வாழ்வில் உழைத்திட வேண்டும்
ஔவியம் பேச மறுத்திடல் வேண்டும்
இஃது எந்நாளும் மறக்காதிருத்தல் வேண்டும்.

ஃஃஃ

**வாரிசு**
அன்பு மகன் ஆதித்யா
ஆசை மகள் ஐஸ்வர்யா
இருவரும் எங்களின் உயிரோட்டம்
ஈடில்லா பாசத்தின் நீரோட்டம்
உயிராய் அன்பைப் பொழிகின்றார்
ஊட்டம் எம்வாழ்விற்கு கொடுக்கின்றார்
எங்களின் எண்ணம் புரிந்திடுவர்
ஏற்றம்பெற நாளும் உழைத்திடுவர்
ஐந்திலேயே இருவரும் தெளிந்திட்டனர்
ஒப்புமை சொல்லி வளர்கின்றனர்
ஓசைபோல் திக்கெங்கும் புகழ்பரப்பிடுவர்
ஔசித்தியம் நாளும் வளர்திடுவர்
அஃறிணைக்கும் பரிவுகாட்டி மானுடம் உயர்த்திடுவர்.

ஃஃஃ

**அடடா அருமை**

ஆண்டவன் படைத்தான் நம்மை
இயன்றவரை வளர்த்துவிடு திறமை
ஈசலாய் மாய்வது சிறுமை
உயர்வதற்கு வெல்லுங்கள் கயமை
ஊழ்வினை செய்வதா வறுமை
எதிரிக்கும் செய்யுங்கள் நன்மை
ஏற்றம்பெறும் உங்கள் நிலைமை
ஐயமின்றி போற்றிவிடு பெண்மை
ஒருநாளும் பொறுத்திடாதே மடமை
ஓதுவாரை தொடர்வதில்லை அறியாமை
ஔவையாரோ தமிழுக்கு பெருமை
ஃ தமிழின் தனித்தன்மை.

ஃஃஃ

***படித்ததில் பிடித்த***
அகரவரிசைக் கவிதைகள்

--
!கவியழகன்™

°ღ•தமிழ்மணி•ღ°

°ღ•தாயிற் சிறந்த கோவிலும் இல்லை, தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை๏๏๏°ღ•

ღ♥ღத♥ღமி♥ღழ்♥ღம♥ღக♥ღன்♥

°ღ•தவற்றை மன்னிப்பவன் மனிதன்,
தவற்றை மறப்பவன் தெய்வம்°ღ•

கண்டிப்பா என்னால் தெய்வமாக முடியாது, முயற்சி பண்ணுறேன்

°ღ•எது வரை வாழ்க்கை அழைக்கிறதோ
அது வரை நாமும் சென்றிடுவோம்°ღ•,

°ღ•விடைபெறும் நேரம் வரும்போதும்
சிரிப்பினில் நன்றி சொல்லிடுவோம்°ღ•

°ღ•ஊருக்கொரு வானம் இல்லையே இறைவா உன் படைப்பில்°ღ•
°ღ•ஆளுக்கொரு ஜாதி இல்லையே அது போல் உயிர் பிறப்பில்°ღ•
°ღ•உண்ணும் உணவும் நீரும் தினம் தந்த தெய்வமே
என்றும் உமக்கே நாம் நன்றி சொல்லுவோம்°ღ•


°ღ•எங்கே உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், உரிமைகள் நசுக்கப்படுகிறதோ; அங்கே புரட்சி வெடிக்கிறது°ღ•


°ღ•எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது°ღ•
°ღ•எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது°ღ•
°ღ•எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்°ღ•


°ღ•உள்ளங்கள் அழுதாலும், உதடுகள் சிரிக்கட்டும்°ღ•


வைரத்துளிகள்

°ღ•பேசக்கூடாததை பேசாதிருப்பது தான் நாவடக்கம்,
வாய் மூடி இருப்பதுஅல்ல°ღ•
°ღ•செல்வமும் மதிப்பும் பெருக பர்ஸையும், வாயையும்,
அதிகம் திறக்காதே°ღ•
°ღ•பணமும் செருப்பும் ஒன்று சிறிதாக இருந்தால் கடிக்கும், பெரிதாக இருந்தால் தடுக்கி விழச் செய்யும்°ღ•


உறுதிமொழி

°ღ•மனிதனை மனிதனாய் பார்ப்போம்°ღ•
°ღ•மதத்தை மனிதநேயத்தால் வேரறுப்போம்°ღ•
°ღ•வறுமையை வடு தெரியாமல் ஒழிப்போம்°ღ•
°ღ•வலியோர்க்கு மட்டும் வளமான வாழ்வு என்பதை மாற்றுவோம்°ღ•

°ღ•°ღ•