என்னை பிடிக்கின்றது என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே நீங்கள் எனது நண்பராக இல்லை..உங்களை உங்களுக்காக எந்த விதத்திலும் வழியிலும் நீங்கள் இருந்தாலும் அப்படியே ஏற்றுகொள்கிறேன்...அதையே நட்பென்கிறேன்.....
அன்பு நெஞ்சம் .......
*********************************
நெருக்கடி மிக்க வேளைதான் அனுபவத்தையும்
அறிவையும் பெற்றுக்கொள்ளும் காலம்.
- தலாய் லாமா.
****************************
நெஞ்சே!
துயரத்திலும் நன்மைகாண்
மரணம் வரைக்கும் சென்ற விதை
இன்னொரு ஜனனம் காண்பது போல ...
*************************************
மர்ம புத்தகம்.
அதை யாரும் திறந்து விடவோ
எளிதில் படித்து விடவோ முடியாது
********************************
நீ! பெற்ற வெற்றிகள் அனைத்தையும் ஒரே சமயத்தில்
இழக்க நேரிடும் போதும் மீண்டும் திட சித்தத்தோடு
முயற்சியைத் தொடங்கவும் உன் தோல்வியைப் பற்றி ஒரு
வார்த்தைக் கூட முணுமுணுக்காமலும் இருக்க
முடியுமானால்;
நீ! ஒரு மனிதனாகச் சிறந்தோங்குவாய்!--
ருட்யார்ட் கிப்ளிங்" - 1865-1936
****************************************
உதவி செய்ய முடியாத அளவிற்கு யாரும் ஏழையல்ல. உதவி தேவைப்படாத அளவிற்கு யாரும் பணக்காரரல்ல.
பின்லாந்து.
*****************
**************************
பிறர் வாட பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப் பருவம் எய்தி
கொடுங்கூற்றுக் கிறையெனப் பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ......?



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக